Friday, March 14, 2008

தில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரை ஓயாது எமது சமர்!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தில்லை நடராசன் கோயிலின் திருச்சிற்றம்பல மேடையில் மார்ச் 2ஆம் நாள் காலையில் தமிழ் ஒலித்தது. 'சிற்றம்பல மேடையில் நின்று தமிழ் பாடக்கூடாது, தமிழன் பாடக்கூடாது' என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் அந்தக் கோயிலில் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது.


இது ஒரு வரலாற்றுச் சாதனை! நந்தனையும் பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் 'ஜோதி'யில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கிவைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள், பிரதமர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் தமது குடுமியில் முடிந்து வைத்துக்கொண்டு, அக்கோயிலையே தமது பூர்வீகச் சொத்தென்று உரிமை கொண்டாடும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டிக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தைப் பிணம் மறைக்கும் கொலைக்ககளமாகவும், ராஜ கோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிதர்கள்...


மார்ச் 2ஆம் நாளன்று முதன் முறையாக வீழ்த்தப்பட்டார்கள்.
தேவாரம் பாடிய 'குற்றத்துக்காக' 8 ஆண்டுகளுக்கு முன் இதே சிற்றம்பல மேடையிலிருந்து சிவனடியார் ஆறுமுகசாமியின் கையை உடைத்துத் தூக்கி வீசினார்கள் தீட்சிதர்கள். இன்று தனது 79 வயதில் கண்கள் மங்கி கால்கள் தள்ளாடிய போதிலும், மனதில் சுயமரியாதை உணர்வு குன்றாத அந்தச் சிவனடியாரை, யானை மீதேற்றி அதே சிற்றம்பல மேடையில் கொண்டு வந்து இறக்கினார்கள், செஞ்சட்டையனிந்த எமது தோழர்கள்.


'சிற்றம்பல மேடையில் பக்தர்கள் அனைவரும் தேவாரம் பாடலாம்' என்று பிப்.29 ஆம் தேதியன்று ஆணை பிறப்பித்துவிட்டது அரசு. எனினும், தீண்டாமை வெறி பிடித்த‌ தீட்சித‌ர்க‌ள் அத‌னை ம‌திக்க‌வில்லை. ஆறுமுக‌சாமி பாட‌த் தொட‌ங்கிய‌வுட‌ன் க‌ருவ‌றையை மூடினார்க‌ள்; ந‌ட‌ராச‌னுக்குக் குற்க்கே ந‌ந்தியாய் ம‌றைத்து நின்றார்க‌ள். சூதிர‌ன் வாயிலிருந்து வ‌ரும் நீச‌ பாஷையான‌ த‌மிழ், இறைவ‌னின் காதில் நுழைந்து விட‌க்கூடாது என்ப‌தற்காக‌ ஊளையிட்டார்க‌ள் ஆறுமுக‌சாமியை அடித்தார்க‌ள்: அர‌சு ஆணையை அம‌ல் ப‌டுத்த‌ வந்த‌ போலீசு அதிகாரிக‌ளையும் தாக்கினார்க‌ள். ஆயிர‌மாண்டுக‌ளாய் இந்த‌ ம‌ண்ணைப்பிடித்தாட்டி வ‌ரும் சாதிப்பேய் ம‌லையேற‌ ம‌றுத்து 'ஊழிக்கூத்து' ஆடிய‌தை அன்று நாடே க‌ண்ட‌து; ந‌ட‌ராச‌னும் க‌ண்டான். இந்த‌ப் பார்ப்ப‌ன‌ வெறிக்கூத்தை வென்ற‌ட‌க்கிய‌ பின்ன‌ர்தான் அம்ப‌ல‌த்தில் ஏறிய‌து....த‌மிழ்!


இது நெடிய‌தொரு போராட்ட‌ம், சிற்ற‌ம்ப‌ல‌ மேடையேறித் தேவார‌ம் பாட‌ப் ப‌ல‌முறை முய‌ன்றிருக்கிறார் ஆறுமுக‌சாமி. ஒவ்வொரு முறையும் அவ‌ரைத் துர‌த்தியிருக்கிறார்க‌ள் தீட்சித‌ர்க‌ள். "தேவார‌ம் பாட‌த் த‌டையா, இந்த‌ அநீதியைக் கேட்பாரில்லையா?" என்று துண்ட‌றிக்கைக‌ளை அச்சிட்டுத் த‌னியொரு ம‌னித‌னாக‌ நின்று சித‌ம்ப‌ர‌ம் கோயிலுக்கு வ‌ருகின்ற‌ ப‌க்த‌ர்க‌ளிட‌மெல்லாம் விநியோகித்திருக்கிறார். ப‌ய‌ன் ஏதும் விளைய‌வில்லை.


8.5.2000 அன்று த‌ன்ன‌ந்த‌னியனாக‌ச் சிற்ற‌ம்ப‌ல‌ மேடை ஏறிப் பாட‌த் தொட‌ங்கினார் ஆறுமுக‌சாமி. வாய் திற‌ந்து அடியெடுத்த‌ மறுக‌ண‌மே அவ‌ரை அடித்து வீசினார்க‌ள் தீட்சித‌க் காலிக‌ள். ஆட‌ல்வ‌ல்லான் சாட்சியாக‌ ந‌ட‌ந்தது இந்த‌ அட்டூழிய‌ம். ஆனால் கேட்பார் யாருமில்லை. முறிந்த‌ கையுட‌ன் காவ‌ல் நிலைய‌ம் சென்று புகார் கொடுத்தார் ஆறுமுக‌சாமி, ஒப்புக்கு ஒரு வ‌ழ‌க்கு ப‌திவு செய்த‌து போலீசு. 'சாட்சியில்லை' என்று தீட்சித‌ர்க‌ளை விடுவித்த‌து நீதிம‌ன்ற‌ம். வ‌ழ‌க்காட‌க் காசில்லாம‌ல், இல‌வ‌ச‌மாய் வாதாட‌ ஒரு வ‌க்கீலைத் தேடி ம‌னித‌ உரிமைப் பாதுகாப்பு மைய‌த்தின் வ‌ழ்க்குரைஞ‌ர் ராஜுவிட‌ம் வ‌ந்து சேர்ந்தார் ஆறுமுக‌சாமி. " இது வெறும் ம‌னித‌ உரிமைவ‌ழ‌க்க‌ல்ல‌; ம‌க்க‌ளை ந‌சுக்கிக் கொண்டிருக்கும் பார்ப்ப‌னிய‌ச் ச‌ழ‌க்கு" என்ப‌தால், ஆறுமுக‌சாமியை ம‌.க‌.இ.க‌.வின் த‌மிழ் ம‌க்க‌ள் இசைவிழா மேடைக்கு அழைத்து வ‌ந்தார் வ‌ழ‌க்குரைஞ‌ர் ராஜு. "தீட்சித‌ர்க‌ளின் கொட்ட‌த்தை ஒடுக்குவோம்! தில்லைச் சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் த‌மிழை அர‌ங்கேற்றுவோம்!" என‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள்முன் அன்று அறிவித்தோம்.


கடந்த 4 ஆண்டுகளில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் முன்முயற்சியில், சிதம்பரம் நகரின் விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தி.க. போன்ற அமைப்புகளின் பங்களிப்புடன் சிதம்பரத்தில் எண்ணற்ற பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகண் போன்றோர் இம்முயற்சிக்கு துணை நின்றிருக்கின்றனர். நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வழியாக இப்பிரச்சினையை நாடே அறிந்திருக்கிறது. எமது தோழர்களும் மனித உரிமைப் பாதுகாப்புய் மையத்தின் இளம் வழக்குரைஞர்களும் இரவு பகலாக இதற்குப் பாடுபட்டிருக்கிறார்கள். எல்லா முயற்சிகளையும் நீதிமன்றத்தின் துணை கொண்டும், அதிகாரத் தாழ்வாரங்களில் அவர்கள் பெற்றிருக்கும் செல்வாக்கைக் கொண்டும் முடக்கி வந்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.
'சிற்றம்பலத்தில் தேவாடம் பாடலாம்' என்ற இந்த அரசாணை தானாக வந்துவிடவில்லை; பல்வேறு சதிகளையும் மீறி அரசாங்கத்தின் வாயிலிருந்து இந்த அரசாணையை நாங்கள் வரவழைத்திருக்கிறோம். அரசாணை வந்த மிறகும் தமிழை அம்பலத்தில் ஏற்றுவதற்காக அக்கோயில் வாசலிலே அன்று தடியடி பட்டு இரத்தம் சிந்தியிருக்கிறார்கள் எமது தோழர்கள். மார்ச் 2ஆம் நாள் மாலை ஆறுமுகசாமியும் எமது தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டனர். அடுத்தநாள் 'சிற்றம்பல மேடையேறித் தமிழ் பாட யாரேனும் ஒரு சிவனடியார் வருவார்' என்று நாங்கள் காத்திருந்தோம். அடியார்கள் இல்லை, ஓதுவார்கள் இல்லை, தமிழ் ஆர்வலர்கள் இல்லை, ஒருவரும் வரவில்லை. இந்த அடிமைத்தனத்தையும் கோழைத்தனத்தையும் கண்டு மனம் நொந்து எமது தோழர்களே சிற்றம்பலம் ஏறிப்பாடினார்கள். அங்கே நாங்கள் நடத்தியது வழிபாடு அல்ல; இழி மொழி என்று தமிழையும், சூத்திரர்‍...பஞ்சமர் என்று உழைக்கும் மக்களையும் இழிவுபடுத்தும் பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம்!


"அப்பாவி சிவனடியாரைப் பயன்படுத்டிக்கொண்டு, ஆத்திகர்களின் பிரச்சினையில் நாத்திகர்களான நக்சலைட்டுகள் புகுந்து ஆதாயம் தேடுகிறார்கள்" என்று அலறுகிறது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல். மணல் திட்டை இடித்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்று கூறும் பா.ஜனதா, சு.சாமி, ஜெயலலிதா கும்பல் தேவாரத்துக்காகக் குரல் கொடுப்பதை நாங்களா தடுத்தோம்? சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறுவதையும், கருவறைக்குள் பார்ப்பனரல்லாதார் நுழைவதையும் சகிக்கவொண்ணாத இந்தச் சாதிவெறியர்கள், இதை ஆத்திகர்...நாத்திகர் பிரச்சினையென்று திசைதிருப்புகிறார்கள்.


அன்று அப்பாவி சிவ‌ன‌டியாரை அடித்து வீழ்த்திய‌ தீட்சித‌ர்க‌ள் ஆத்திக‌ர்கள்தான். தில்லையைச் சுற்றியிருக்கும் திருவாவ‌டுதுறை, திருப்ப‌ன‌ந்தாள், த‌ரும‌புர‌ம் போன்ற‌ ஆதீன‌ங்க‌ள் அனைவ‌ரும் ஆத்திக‌ர்க‌ள்தான். சைவ‌மும் த‌மிழும் பிசைந்து வ‌யிறு வ‌ள‌ர்ந்த்த‌ இந்த‌த் துற‌விக‌ளோ, ப‌ட்ட‌ங்க‌ளும் விருதுக‌ளும் சூடிய‌ சைவ‌ அறிஞ‌ர்க‌ளோ திருச்சிற்ற‌ம்ப‌ல‌ மேடையேறுவ‌தை நாங்க‌ளா த‌டுத்தோம்? ஆதீன‌ங்க‌ளாலும் ஆன்மீக‌வாதிக‌ளாலும் ஏள‌ன‌ம் செய்து புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌ பிற‌குதான், ஆண்ட‌வ‌னை ம‌றுக்கும் க‌ம்யூனிஸ்டுட‌ளான‌ எங்க‌ளைத் தேடி வ‌ந்தார் ஆறுமுக‌சாமி.


சைவ‌ மெய்ய‌ன்ப‌ர்க‌ளெல்லாம் ப‌த‌வியும் ப‌விசும் பெறுவ‌த‌ற்காக‌ பார்ப்ப‌ன‌க் கும்ப‌லுட‌ன் க‌ள்ள‌ உற‌வு வைத்திருப்ப‌த‌னால்தான் சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் த‌மிழ‌ன் ஏற‌ முடிய‌வில்லை. த‌மிழைத் த‌ம் பிழைப்புக்கான‌ க‌ருவியாக‌ மாற்றிக் கொண்ட‌ கட்சிக‌ளும் அமைப்புக‌ளும் செய்துவ‌ரும் துரோக‌த்தினால்தான் ஏழைத் த‌மிழ் அம்ப‌ல‌மேற‌ முடிய‌வில்லை. இல்லையென்றால் தேவார‌த்தை மீட்டெடுத்த‌ தில்லைக் கோயிலிலேயே அத‌னைப் புதைப்ப‌த‌ற்கு தீட்சித‌ர்க‌ளால் இய‌ன்றிருக்குமா?


சிற்ற‌ம்ப‌ல‌த்தில் த‌மிழை ஏற்ற‌, தாய்மொழியில் இறைவ‌னைப் போற்ற‌ ப‌க்த‌னுக்கு அர‌சாணையின் துணை எத‌ற்கு? போலீசின் துணைஎத‌ற்கு?


ச‌ட்ட‌ம் உரிமையை வ‌ழ‌ங்க‌த்தான் முடியும். அந்த‌ உரிமையைப் ப‌ய‌ன்ப‌டுத்தும் உண‌ர்வை வ‌ழ‌ங்க‌ முடியாது. அந்த‌ உண‌ர்வென்ப‌து ப‌க்தி உண‌ர்வ‌ல்ல‌. பார்ப்ப‌ன‌ ஆதிக்க‌த்திற்கு எதிரான‌ சுய‌ம‌ரியாதை உண‌ர்வு. சாதி ஏற்ற‌த்தாழ்வுக்கு எதிரான‌ ச‌ம‌த்துவ‌ உண‌ர்வு. ச‌ம‌ஸ்கிருத‌ ஆதிக்க‌த்துக்கு எதிரான‌ த‌மிழ் உண‌ர்வு.


தில்லையில் நாம் பெற்றிருக்கும் இந்த‌ வெற்றி ஒரு துவ‌க்க‌ப்புள்ளி. தீட்சித‌ர்க‌ள் ச‌ர‌ண‌டைய‌வுமில்லை, சாதி ஆதிக்க‌த்தை விட‌வுமில்லை. ந‌ந்த‌ன் நுழைந்த‌ தெற்கு வாயிலை அடைத்து தீட்சித‌ர்க‌ள் எழுப்பியுள்ள‌ தீண்டாமைச் சுவ‌ர் ஒரு அவ‌மான‌ச் சின்ன‌மாக‌ இன்னும் நின்று கொண்டிருக்கிற‌து. அது த‌க‌ர்க்க‌ப்ப‌ட‌ வேண்டும். தீட்சித‌ர்க‌ள் திருடிக்கொண்ட‌ தில்லைக் கோயிலை அற‌நிலைய‌ ஆட்சித்துறை கைப்ப‌ற்ற‌ வேண்டும்.


ச‌ம‌ஸ்கிருத‌ வ‌ழிபாட்டை அக‌ற்றுத‌ல், த‌மிழ் வ‌ழிபாடு, அனைத்து சாதியின‌ரும் அர்ச்ச‌க‌ராத‌ல்... என‌ நீண்ட‌தொரு போராட்ட‌த்தை நாம் ந‌ட‌த்த‌ வேண்டியிருக்கிற‌து. ந‌ட‌த்துவோம்!



வ‌ர்க்க‌ம், சாதி, இன‌ம், மொழி, பாலின‌ம் போன்ற‌ ஒவ்வொரு துறையிலும் நில‌வும் ஆதிக்க‌த்தை எதிர்த்து க‌ம்யூனிஸ்டுக‌ளாகிய‌ நாங்க‌ள் போராடுவோம்! அன்று, பார்ப்ப‌ன‌ ஆதிக்க‌த்தையும் தீண்டாமையையும் எதிர்த்து திருவ‌ர‌ங்க‌ம் க‌ருவ‌றைக்குள் நுழைந்து அர‌ங்க‌நாத‌னைத் தீண்டினோம்! இன்று, சிற்ற‌ம்ப‌ல‌த்தைத் தீண்டியிருக்கிற‌து த‌மிழ்! எல்லாவ‌கைத் தீண்டாமைக‌ளையும் ஆதிக்க‌ங்க‌ளையும் எதிர்த்துப் போராடுவோம்!
உங்க‌ள் துணையுட‌ன் வெற்றியும் பெறுவோம்!

இவ‌ன்
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌னி
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர்...இளைஞ‌ர் முன்ன‌னி
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த் தொழிலாள‌ர் முன்ன‌னி

தொட‌ர்புக்கு:
இரா. சீனிவாச‌ன்,
#16, முல்லைந‌க‌ர் வ‌ணிக‌ வ‌ளாக‌ம்,
2 ஆவ‌து நிழ‌ற்சாலை,
அசோக்ந‌க‌ர்,
சென்னை ‍ 600083.
தொலைபேசி: 23718706
கைபேசி: 9941175876.

Monday, February 18, 2008

கருத்தரங்கம்
























































பிப்ரவரி 19, 2008 செவ்வாய், மாலை 4 மணி
பத்மா ராம் மகால் (ராம் தியேட்டர்)
83, N.S.K சாலை,கோடம்பாக்கம்,சென்னை- 24
இந்திய நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்
தலைமை :
சு.ப.தங்கராசு
பொதுச்செயலாளர்,
பு.ஜ.தொ.மு,
அனைத்திந்திய செயற்குழு உறுப்பினர்,
இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்
உரையாற்றுவோர்:.
நீண்ட பயணம் சுந்தரம்
மாநிலச் செயலாளர் இ.பொ.க (மா.லெ)..
தமிழேந்தி
மார்க்சிய - பெரியாரிய பொதுவுடமைக் கட்சி,..
இல.கோவிந்தசாமி
செயலாளர் இ.பொ.க (மா.லெ) செங்கொடி..
சங்கர சுப்புவழக்குரைஞர்,
மாநிலத்தலைவர்,
இந்திய மக்கள் வழக்குரைஞர்கள் சங்கம்...
சாந்திர பகதூர்
மத்தியக் குழு உறுப்பினர்,
நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்புக் குழு,..
இந்தியா.
ஏ.எஸ். குமார்
மாநில துனைத்தலைவர்,A.I.C.C.T.U..
த.வெள்ளையன்
தலைவர்,
தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை...
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்,
தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி...
தொல்.திருமாவளவன்
பொதுச் செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...
தியாகு
பொதுச் செலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்...
சுப.வீரபாண்டியன்
பொதுச்செயலாளர்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை...
மருதையன்
பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்...
சிறப்புரை:
பவன் பட்டேல்
செயலாளர்,
இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்.
லட்சுமண் பந்த்
செயலாளர்,
நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்புக் குழு,
இந்தியா.
சி.பி.கஜீரேல்
மத்தியக் குழு உறுப்பினர்,
நேபாள பொதுவுடமைக் கட்சி, (மாவோயிஸ்ட்)
நன்றியுரை:
வ.கார்த்திகேயன்
செயலாளர்,
புரட்சிகர - மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.
தொடர்புக்கு:
அ.முகுந்தன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை - 24
அழைக்க - 94448 34519




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































சென்னை - 24





































Saturday, February 2, 2008

இதுவன்றோ வீரம்

குஜராத் முஸ்லீம் படுகொலைகள் தொடர்பான வழக்கொன்றில், குற்றவாளிகளைத் தண்டித்து, மும்பாய் குற்றவியல் நீதிமன்றம் சனவரி மாத இறுதியில் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பானது, ரவுடிகள், மாஃபியா கும்பலைவிட, ஆர்.எஸ்.எஸ் இந்து மதவெறி பாசிஸ்டுகள் வக்கிரமான கிரிமினல் பேர்வழிகள்; பஞ்சமா பாதகத்தையும் செய்யத்துணியும் பயங்கரவாதிகள் என்பதையும்: மோடி அரசிற்கும், இப்படுகொலைகளுக்கும் நேரடித் தொடர்புண்டு என்பதையும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இன்னொருபுறம் இப்பயங்கரவாதிகளை எதிர்த்து மன உறுதியுடனும், துணிச்சலோடும் ஆறாண்டுகளாகப் போராடி வரும் பில்கிஸ் பானு என்ற வீராங்கனையையும் அடையாளம் காட்டியிருக்கிறது.

பில்கிஸ்பானு, குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்டத்திலுள்ள ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்தவர். தனது கணவர் யாகூப் ரசூல், மூன்றரை வயது பெண் குழந்த சலேஹாவுடன் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது பிறந்த வீட்டிற்கு பில்கிஸ் பானு வந்திருந்தபொழுதுதான், குஜராத்தில் இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதல் வெடித்தது.

ரந்திக்புர் கிராமத்தில் வசித்துவந்த முசுலீம்களின் 71 வீடுகளும்; அவர்களுக்குச் சொந்தமான 14 மளிகைக் கடைகளும்; வேறுசில பெட்டிக் கடைகளும் இந்து மதவெறிக் கும்பலால் முற்றிலுமாகத் தீக்கிரையாக்கப்பட்டன; அனைத்து முசுலீம் குடும்பங்களும் உயிரையாவது காப்பாற்றிக் கொள்ள, கிராமதைவிட்டு வெளியேறின.

பில்கிஸ்பானுவும், தனது கணவர், குழந்தை, தாயார், இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளிட்டு தனது உறவினர்கள் 16 பேரோடு ரந்திக்புரிலிருந்து வெளியேறி, பரியா என்ற ஊரை நோக்கித் தப்பிச் செல்லத் தொடங்கினார். இந்து மதவெறியர்களின் கண்களில் அகப்பட்டுக் கொண்டுவிடாமல் பில்கிஸ்பானுவின் குடும்பம் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டிருந்த நேரத்திலே, அவரின் அத்தை மகளுக்கு குஜாவல் மசூதியில் பெண் குழந்தையும் பிறந்தது. இதற்கு மறுநாள் குத்ரா என்ற ஊருக்கு அவர்கள் வந்தபொழுது, அவ்வூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர்.

அங்கு இரண்டு நாட்கள் பாதுகாப்பாக இருந்துவிட்டு, மூன்றாவது நாள் ஒவ்வொருவரும் பழங்குடியினர் போல வேடமணிந்து கொண்டு, குத்ராவில் இருந்து வெளியேறி, சாபர்வாட் என்ற கிராமத்திற்கு வந்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான வயல்வெளியில் பதுங்கியிருந்தனர்.அப்பொழுது அந்த வழியாக ஆயுதங்களுடன் சென்றுகொண்டிருந்த இந்து மதவெறிக் கும்பலிடம் பில்கிஸ்பானு குடும்பம் மாட்டிக் கொண்டது. அக்கும்பலில் இருந்த ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்த இந்து வெறியர்கள் பில்கிஸ்பானுவை அடையாளம் கண்டுகொண்டு, தங்களின் வ‌க்கிரமான தாக்குதலை நடத்தினர்.

ஷைலேஷ்பட் என்ற இந்து மதவெறியன் பில்கிஸ்பானுவின் குழந்தை சலேஹாவை அவரிடமிருந்து பிடுங்கி, அவரின் கண் எதிரிலேயே அக்குழந்தையை தரையில் அடித்துக் கொன்றான். பிறகு அவனும், அக்கும்பலைச் சேர்ந்த லாலா டாக்டர், லாலோ வக்கீல், கோவிந்த் நானா ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, பில்கிஸ்பானுவைக் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தினர் கர்ப்பமாக இருக்கும் தன்னைவிட்டுவிடும்படி பில்கிஸ்பானு கெஞ்சியதை, கதறியதை அக்கும்பல் காதிலாயே போட்டுக் கொள்ளவில்லை. தங்களின் காமவெறியைத் தீர்த்துக் கொண்ட ப்றகு, அக்கும்பல் பில்கிஸ்பானுவைத் தீர்த்துக் கட்டும் வெறியோடு தாக்கியதில், அவர் சுயநினைவு இழந்து விழுந்தார்.

பில்கிஸ்பானு மட்டுமின்றி அவரின் தாயார், சகோதரிகள் உள்ளிட்டு எட்டுப் பெண்கள் அக்கும்பலால் பாலியல் பலாத்காரப்படுத்தப் பட்டனர். பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைவரும் கத்தியாலும், ஈட்டியாலும், குண்டாந்தடிகளாலும் தாக்கப்பட்டனர்.

இரண்டு மூண்று மணி நேரம் கழித்து பில்கிஸ்பானுவிற்கு நினைவு திரும்பிய பொழுது, தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களும், நான்கு சிறுவர்களும் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டார்; மீதிப்பேர் இருந்த சுவடே தெரியவில்லை. பில்கிஸ்பானு, அந்தப் பலவீனமான நிலையிலும் நடந்து சென்று, வழியில் தென்பட்ட ஒரு பழங்குடி இனப் பெண்ணிடம் இரவலாக ஆடைவாங்கி அணிந்து கொண்டு, லிம்கேடா போலீசு நிலையத்திற்குச் சென்று இத்தாக்குதல் பற்றி புகார் கொடுத்தார். அப்பொழுதுதான், இந்து மதவெறிக் கலவரத்தின் சூத்திரதாரியாக மோடி அரசு இருப்பதை பில்கிஸ்பானு புரிந்து கொண்டார்.

அப்போலீசு நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்த சோமபாய்கோரி, பில்கிஸ்பானு வாக்குமூலம் அளித்தபடி நடந்த சம்பவத்தைப் புகாராகப் பதிவு செய்யாமல், குற்றவாளிகளைக் காக்கும் நோக்கத்தோடு, ஒரு பொய்யான புகாரைப் பதிவு செய்தான். பில்கிஸ்பானுவைப் பரிசோதித்த மருத்துவர்களும், சம்பவம் ந்டந்த தேதி/நேரம், காயங்கள் பற்றிய குறிப்புகள் இன்றி, மொன்னையான அறிக்கையைத் தயார் செய்தனர். "குற்றவாளிகளை அடையாளம் காட்ட முயற்சி செய்தால், விஷ ஊசி போட்டுக் கொலை செய்துவிடுவோம்" என போலீசாரால் பில்கிஸ்பானு மிரட்டப்பட்டார்.

இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காக நடத்தப்பட்ட கோத்ரா முகாமில், பஞ்ச்மஹால் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி ரவியைச் சந்தித்த பில்கிஸ்பானு, தனது குடும்பப் பெண்கள் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதையும்; தனது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும், சிறுவர்களும், தனது பெண் குழந்தையும் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதையும்; குற்றவாளிகளை அடையாளம் காட்டக் கூடாது என போலீசாரால் தான் மிரட்டப்பட்டதையும் கூறினார். இந்து மதவெறியர்கள் நடத்திய தாக்குதலில் தப்பிப் பிழைத்த பில்கிஸ்பானுவின் இரண்டு உறவினர்களும் சாட்சியம் அளித்தனர். இதனையடுத்து இச்சம்பவம் பற்றி மீண்டும் போலீசு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

எனினும், அவ்விசாரணை ஏனோ தானோவென்றே நடத்தப்பட்டு, ஒப்புக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் மிக விரைவாகவே பிணையில் விடப்பட்டனர். இவ்வழக்கின் முக்கிய சாட்சியன பில்கிஸ்பானு பலவழிகளில் மிரட்டப்பட்டதால், அவர் தலைமறைவாகப் போக நேர்ந்தது. குஜராத் படுகொலை தொடர்பான நூற்ருக்கணக்கான வழக்குகளைச் சாட்சியம் இல்லை என்று கூறி மோடி அரசு கைகழுவியபோது, கும்பலோடு கோவிந்தாவாக பில்கிஸ்பானு வழக்கையும் கைவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பில்கிஸ்பானு. உச்சநீதி மன்றம், இவ்வழக்கை மேண்டும் புலன்விசாரணை செய்யுமாறு சி.பி.ஐ க்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. நடத்திய புலன்விசாரணையின் அடிப்படையில் அகமதாபாத் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. "சாட்சிகள் தொடர்ந்து மிரட்டப்படுவதால், இவ்வழக்கு குஜராத்தில் நடந்தால் நீதி கிடைக்காது; எனவே, வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்" எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தார், பில்கிஸ்பானு. இதனையடுத்து, இவ்வழக்கு மும்பய்க்கு மாற்றப்பட்டது.

மும்பாய் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில், 20 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுள் இரண்டு மருத்துவர்கள், ஐந்து போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏழுபேர் நிரபராதிகளாகத் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுதே குற்றவாளி ஒருவர் இறந்து போனதால், மீதி 12 பேரில் 11 குற்றவாளிகளூக்கு ஆயுள் தண்டனையும்; பில்கிஸ்பானு அளித்த புகாரைப் பதிவு செய்ய மறுத்த போலீசு கான்ஸ்டபிள் சோமபய் கோரிக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

.......................

பில்கிஸ்பானுவின் விடாப்பிடியான போராட்டத்தின் காரணமாகத்தான் இத்தீர்ப்பு கிடைத்திருக்கிறதேயொழிய, நீதிமன்ற முனைப்பின் காரணமாக இந்தச் சிறிய வெற்றி கிடைக்கவில்லை. இந்து மதவெறிக் கும்பல் இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை, தாக்குத‌ல் நடந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, பக்கத்தில் இருந்த காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று புதைத்துவிட்டது. பில்கிஸ்பானுவின் மகள் சலேஹாவின் சடலம் எங்கோ மாயமாய் மறைந்து போனது. இதனைக் காட்டி, இப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என இந்து மதவெறிக் கும்பல் வாதாடியது.

பில்கிஸ்பானுவின் உறவினர்களின் சடலங்களை இரண்டாம் முறை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக சி.பி.ஐ. தோண்டியெடுத்த பொழுது, அச்சடலங்கள் தலையற்ற முண்டங்களாக இருந்தன. சடலங்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகவே, அவ்வுடல்களில் இருந்து தலைகள் "மர்மமான" முறையில் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டிருந்தன‌. சடலங்கள் விரைவாக அழுகிப் போய்த் தடயங்கள் மறைந்து போய்விடவேண்டும் என்பதற்காகவே, சடலங்களின் உடம்பு முழுவதும் உப்பு தடவப்பட்டிருந்தது.

தாக்குதல் தொடர்பான முக்கியமான சாட்சியங்கள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பில்கிஸ்பானு மற்றும் அச்சம்பவத்தில் தனது தாயைப் பறி கொடுத்த மற்றொரு சிறுவனின் வாக்குமூல‌ங்கள்தான், இவ்வழக்கிற்கே உயிர்நாடியாக இருந்தன. பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஷஹீரா ஷேக்கை மிரட்டிப்பணிய வைத்ததைப் போல, பில்கிஸ்பானுவையும் மிரட்டிப் பணியவைக்க முயன்றது, இந்து மதவெறிக் கும்பல். இதற்கொல்லாம் அஞ்சிவிடாத பில்கிஸ் பானு, கடந்த ஆறாண்டுகளாகத் தலைமறைவாக வாழ்ந்து கொண்டே, வழக்கையும் நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை தர மறுத்துவிட்ட நீதிமன்றம், அதனை நியாயப்படுத, "அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை வழங்கமுடியும்; இக்குற்றவாளிகளுள் யார் யார் என்னென்ன குற்றங்களைச் செய்தார்கள் என்பது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை" என்று கூறியிருக்கிறது.

குஜராத்தில் இந்து மத வெறி பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தில், ஏறத்தாழ 2,000 த்துக்கும் மேற்பட்ட அப்பாவி முசுலீம்கள், வக்கிரமான முறையில் தான் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமான பிறகும், நீதிமன்றம் பில்கிஸ்பானு வழக்கை ஏதோ தனித்ததொரு சம்பவமாகப் பிரித்து பார்த்திருப்பதே நாணயக்கேடானது. மேலும், இந்து மதவெறியர்கள் ஒவ்வொரு கலவரத்திலும், "கும்மலாகச் சென்று முஸ்லீம்களைத் தாக்குவது; முஸ்லீம் பெண்ககைப் பாலியல் பலாத்காரப்படுத்துவது" என்பதை ஒரு உத்தியாகவே செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், "இந்து மதவெறிக் கும்பல் எப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஏடுபட்டாலும் அவர்களின் உயிரை நீதிமன்றம் பறித்து விடாது" என்று உத்தரவாதமளிப்பதாகவே, இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

குண்டு வைக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு சர்வ சாதாரணமாகத் தூக்கு தண்டனை அளிக்கும் இந்திய நீதித்துறை, கும்பல் வன்முறையில் ஈடுபடும் இந்து மதவெறி ப‌யங்கரவாதிகளுக்குத் தண்டனை அளிக்கும் போதோ, "நிதானமாக" நடந்து கொள்கிறது. இந்திய நீதிமன்றங்களிடம் கானப்படும் இந்தக் காவிப் பாசத்தை நிரூபிப்பதற்கு ஏராளமார தீர்ப்புகளை ஆதாரமாகக் காட்ட முடியும்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மருத்துவர்களும், ஐந்து போலீசு அதிகாரிகளும், "தங்களின் கடமையை முறையாகச் செய்யாமல், நடந்த குற்றத்தை மூடி மறைத்து, இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கிறார்கள்" என நீதிமன்றமே ஒத்துக் கொண்ட பிறகும், "அவர்களுக்கு இச்சதிச் செயலில் பங்கில்லை" என்ற காரணத்தைக் "கண்டுபிடித்து" அவர்களை விடுதலை செய்திருக்கிறது. காவிமயமாகி வரும் இந்திய அதிகார வர்க்கத்திறிகு, இதைவிட இனிப்பான தீர்ப்பு வேறெதுவும் இருக்க முடியாது.

இவர்களின் விடுதலையை எதிர்த்து மோடி அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார் பில்கிஸ்பானு. இந்தக் கோரிக்கை மோடிக்கு மட்டுமல்ல, "மோடியை இந்து மதவெறியன் அல்ல" எனச் சப்பைக்கட்டு கட்டும் "சோ" போன்ற நயவஞ்சகப் பேர்வழிகளுக்கும் விடப்பட்டுள்ள சவால்.

..............

தீர்ப்பு வெளிவந்த பிறகும், தான் தொடர்ந்து மிரட்டப்படுவதாகக் கூறியிருக்கும் பில்கிஸ்பானு, "இத்தீர்ப்பு முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு அரசுயலை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என நான் கருதவில்லை" எனப் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். தீர்ப்பு வெளிவந்த நாளன்று, ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்த 60 முஸ்லீம் குடும்பங்கள் தங்களின் பாதுகாப்பு கருதி, கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.

இந்து மதவெறியர்களைத் தெருவில் எதிர்த்து நின்று பொராடக் கூடிய வலிமை கொண்ட ஜனநாயக‌ இயக்கங்கள் இல்லையென்றால், நீதிமன்றத் தீர்ப்புகளால் முஸ்லீம்களைப் பாதுகாத்து விட முடியாது என்பதை அவைகள் உணர்ந்திருப்பதையே இவ்வெளியேற்றம் எடுத்துக் காட்டுகிறது. உண்மை இப்படியிருக்க, முதலாளித்துவப் பத்திரிக்கைகளோ, இத்தீர்ப்பைக் காட்டி, சட்டத்தின் மூலமே இந்து மதவெறியர்களைத் தண்டித்து விட முடியும்" என்ற மாயையைப் பரப்பி வருகின்றனர்.

குஜராத் படுகொலை தொடர்பான 1,600 வழக்குகள் கடந்த ஆறாண்டுகளாக விசாரணை நிலையிலேயே உள்ளன. பில்கிஸ்பானுவைப் போல, எத்தனை சாட்சிகளால், தலைமறைவாக வாழ்ந்து கொண்டு, இந்து மதவெறியர்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுவிட முடியும்?

இரண்டாம் உலகப் போரில் யூதர்களுக்கு எதிராக நாஜிகள் நடத்திய இனப் படுகொலையை விசாரிக்க நூரம்பர்க் நீதிமன்றம் அமைக்கப்பட்டதைப்போல, குஜராத் படுகொலையை விசாரிக்கவும் சிறப்பு நீதிமன்றக்ஙள் அமைக்கப்பட வேண்டும்; இப்படுகொலையை நடத்திய சங்பரிவார அமைப்புகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும். இதன் மூலம் மட்டும்தான், பதிக்கப்பட்ட முஸ்லீம்கள் அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

ஆனால், இந்தியக் 'குடியரசோ' இதனைச் செய்ய மறுத்து வருகிறது. எனவே, பில்கிஸ்பானு போராடி பெற்ற இத்தீர்ப்பை, மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றியாக இந்திய ஆளும் கும்பல் கொண்டாடத் துடிப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது.

"மேற்க‌ண்ட‌ க‌ட்டுரை புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌ம் பிப்ர‌வ‌ரி/2008 இத‌ழில் வெளியாகியிருக்கிற‌து."