tag:blogger.com,1999:blog-82154385587828146992023-11-16T05:00:26.964-08:00வெண்மணிசாதி நம் மீது சாபாமா? கீழ் வெண்மணி காயம் ஆறுமா?பகத்http://www.blogger.com/profile/04440500903645450578noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8215438558782814699.post-61113803863718701432008-03-14T19:34:00.000-07:002008-03-14T19:40:16.916-07:00தில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரை ஓயாது எமது சமர்!!அன்பார்ந்த உழைக்கும் மக்களே!<br /><br />தில்லை நடராசன் கோயிலின் திருச்சிற்றம்பல மேடையில் மார்ச் 2ஆம் நாள் காலையில் தமிழ் ஒலித்தது. 'சிற்றம்பல மேடையில் நின்று தமிழ் பாடக்கூடாது, தமிழன் பாடக்கூடாது' என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் அந்தக் கோயிலில் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது.<br /><br /><br />இது ஒரு வரலாற்றுச் சாதனை! நந்தனையும் பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் 'ஜோதி'யில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கிவைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள், பிரதமர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் தமது குடுமியில் முடிந்து வைத்துக்கொண்டு, அக்கோயிலையே தமது பூர்வீகச் சொத்தென்று உரிமை கொண்டாடும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டிக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தைப் பிணம் மறைக்கும் கொலைக்ககளமாகவும், ராஜ கோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிதர்கள்...<br /><br /><br />மார்ச் 2ஆம் நாளன்று முதன் முறையாக வீழ்த்தப்பட்டார்கள்.<br />தேவாரம் பாடிய 'குற்றத்துக்காக' 8 ஆண்டுகளுக்கு முன் இதே சிற்றம்பல மேடையிலிருந்து சிவனடியார் ஆறுமுகசாமியின் கையை உடைத்துத் தூக்கி வீசினார்கள் தீட்சிதர்கள். இன்று தனது 79 வயதில் கண்கள் மங்கி கால்கள் தள்ளாடிய போதிலும், மனதில் சுயமரியாதை உணர்வு குன்றாத அந்தச் சிவனடியாரை, யானை மீதேற்றி அதே சிற்றம்பல மேடையில் கொண்டு வந்து இறக்கினார்கள், செஞ்சட்டையனிந்த எமது தோழர்கள்.<br /><br /><br />'சிற்றம்பல மேடையில் பக்தர்கள் அனைவரும் தேவாரம் பாடலாம்' என்று பிப்.29 ஆம் தேதியன்று ஆணை பிறப்பித்துவிட்டது அரசு. எனினும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்கள் அதனை மதிக்கவில்லை. ஆறுமுகசாமி பாடத் தொடங்கியவுடன் கருவறையை மூடினார்கள்; நடராசனுக்குக் குற்க்கே நந்தியாய் மறைத்து நின்றார்கள். சூதிரன் வாயிலிருந்து வரும் நீச பாஷையான தமிழ், இறைவனின் காதில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக ஊளையிட்டார்கள் ஆறுமுகசாமியை அடித்தார்கள்: அரசு ஆணையை அமல் படுத்த வந்த போலீசு அதிகாரிகளையும் தாக்கினார்கள். ஆயிரமாண்டுகளாய் இந்த மண்ணைப்பிடித்தாட்டி வரும் சாதிப்பேய் மலையேற மறுத்து 'ஊழிக்கூத்து' ஆடியதை அன்று நாடே கண்டது; நடராசனும் கண்டான். இந்தப் பார்ப்பன வெறிக்கூத்தை வென்றடக்கிய பின்னர்தான் அம்பலத்தில் ஏறியது....தமிழ்!<br /><br /><br />இது நெடியதொரு போராட்டம், சிற்றம்பல மேடையேறித் தேவாரம் பாடப் பலமுறை முயன்றிருக்கிறார் ஆறுமுகசாமி. ஒவ்வொரு முறையும் அவரைத் துரத்தியிருக்கிறார்கள் தீட்சிதர்கள். "தேவாரம் பாடத் தடையா, இந்த அநீதியைக் கேட்பாரில்லையா?" என்று துண்டறிக்கைகளை அச்சிட்டுத் தனியொரு மனிதனாக நின்று சிதம்பரம் கோயிலுக்கு வருகின்ற பக்தர்களிடமெல்லாம் விநியோகித்திருக்கிறார். பயன் ஏதும் விளையவில்லை.<br /><br /><br />8.5.2000 அன்று தன்னந்தனியனாகச் சிற்றம்பல மேடை ஏறிப் பாடத் தொடங்கினார் ஆறுமுகசாமி. வாய் திறந்து அடியெடுத்த மறுகணமே அவரை அடித்து வீசினார்கள் தீட்சிதக் காலிகள். ஆடல்வல்லான் சாட்சியாக நடந்தது இந்த அட்டூழியம். ஆனால் கேட்பார் யாருமில்லை. முறிந்த கையுடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார் ஆறுமுகசாமி, ஒப்புக்கு ஒரு வழக்கு பதிவு செய்தது போலீசு. 'சாட்சியில்லை' என்று தீட்சிதர்களை விடுவித்தது நீதிமன்றம். வழக்காடக் காசில்லாமல், இலவசமாய் வாதாட ஒரு வக்கீலைத் தேடி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழ்க்குரைஞர் ராஜுவிடம் வந்து சேர்ந்தார் ஆறுமுகசாமி. " இது வெறும் மனித உரிமைவழக்கல்ல; மக்களை நசுக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனியச் சழக்கு" என்பதால், ஆறுமுகசாமியை ம.க.இ.க.வின் தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு அழைத்து வந்தார் வழக்குரைஞர் ராஜு. "தீட்சிதர்களின் கொட்டத்தை ஒடுக்குவோம்! தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழை அரங்கேற்றுவோம்!" என ஆயிரக்கணக்கான மக்கள்முன் அன்று அறிவித்தோம்.<br /><br /><br />கடந்த 4 ஆண்டுகளில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் முன்முயற்சியில், சிதம்பரம் நகரின் விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தி.க. போன்ற அமைப்புகளின் பங்களிப்புடன் சிதம்பரத்தில் எண்ணற்ற பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகண் போன்றோர் இம்முயற்சிக்கு துணை நின்றிருக்கின்றனர். நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வழியாக இப்பிரச்சினையை நாடே அறிந்திருக்கிறது. எமது தோழர்களும் மனித உரிமைப் பாதுகாப்புய் மையத்தின் இளம் வழக்குரைஞர்களும் இரவு பகலாக இதற்குப் பாடுபட்டிருக்கிறார்கள். எல்லா முயற்சிகளையும் நீதிமன்றத்தின் துணை கொண்டும், அதிகாரத் தாழ்வாரங்களில் அவர்கள் பெற்றிருக்கும் செல்வாக்கைக் கொண்டும் முடக்கி வந்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.<br />'சிற்றம்பலத்தில் தேவாடம் பாடலாம்' என்ற இந்த அரசாணை தானாக வந்துவிடவில்லை; பல்வேறு சதிகளையும் மீறி அரசாங்கத்தின் வாயிலிருந்து இந்த அரசாணையை நாங்கள் வரவழைத்திருக்கிறோம். அரசாணை வந்த மிறகும் தமிழை அம்பலத்தில் ஏற்றுவதற்காக அக்கோயில் வாசலிலே அன்று தடியடி பட்டு இரத்தம் சிந்தியிருக்கிறார்கள் எமது தோழர்கள். மார்ச் 2ஆம் நாள் மாலை ஆறுமுகசாமியும் எமது தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டனர். அடுத்தநாள் 'சிற்றம்பல மேடையேறித் தமிழ் பாட யாரேனும் ஒரு சிவனடியார் வருவார்' என்று நாங்கள் காத்திருந்தோம். அடியார்கள் இல்லை, ஓதுவார்கள் இல்லை, தமிழ் ஆர்வலர்கள் இல்லை, ஒருவரும் வரவில்லை. இந்த அடிமைத்தனத்தையும் கோழைத்தனத்தையும் கண்டு மனம் நொந்து எமது தோழர்களே சிற்றம்பலம் ஏறிப்பாடினார்கள். அங்கே நாங்கள் நடத்தியது வழிபாடு அல்ல; இழி மொழி என்று தமிழையும், சூத்திரர்...பஞ்சமர் என்று உழைக்கும் மக்களையும் இழிவுபடுத்தும் பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம்!<br /><br /><br />"அப்பாவி சிவனடியாரைப் பயன்படுத்டிக்கொண்டு, ஆத்திகர்களின் பிரச்சினையில் நாத்திகர்களான நக்சலைட்டுகள் புகுந்து ஆதாயம் தேடுகிறார்கள்" என்று அலறுகிறது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல். மணல் திட்டை இடித்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்று கூறும் பா.ஜனதா, சு.சாமி, ஜெயலலிதா கும்பல் தேவாரத்துக்காகக் குரல் கொடுப்பதை நாங்களா தடுத்தோம்? சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறுவதையும், கருவறைக்குள் பார்ப்பனரல்லாதார் நுழைவதையும் சகிக்கவொண்ணாத இந்தச் சாதிவெறியர்கள், இதை ஆத்திகர்...நாத்திகர் பிரச்சினையென்று திசைதிருப்புகிறார்கள்.<br /><br /><br />அன்று அப்பாவி சிவனடியாரை அடித்து வீழ்த்திய தீட்சிதர்கள் ஆத்திகர்கள்தான். தில்லையைச் சுற்றியிருக்கும் திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற ஆதீனங்கள் அனைவரும் ஆத்திகர்கள்தான். சைவமும் தமிழும் பிசைந்து வயிறு வளர்ந்த்த இந்தத் துறவிகளோ, பட்டங்களும் விருதுகளும் சூடிய சைவ அறிஞர்களோ திருச்சிற்றம்பல மேடையேறுவதை நாங்களா தடுத்தோம்? ஆதீனங்களாலும் ஆன்மீகவாதிகளாலும் ஏளனம் செய்து புறக்கணிக்கப்பட்ட பிறகுதான், ஆண்டவனை மறுக்கும் கம்யூனிஸ்டுடளான எங்களைத் தேடி வந்தார் ஆறுமுகசாமி.<br /><br /><br />சைவ மெய்யன்பர்களெல்லாம் பதவியும் பவிசும் பெறுவதற்காக பார்ப்பனக் கும்பலுடன் கள்ள உறவு வைத்திருப்பதனால்தான் சிற்றம்பல மேடையில் தமிழன் ஏற முடியவில்லை. தமிழைத் தம் பிழைப்புக்கான கருவியாக மாற்றிக் கொண்ட கட்சிகளும் அமைப்புகளும் செய்துவரும் துரோகத்தினால்தான் ஏழைத் தமிழ் அம்பலமேற முடியவில்லை. இல்லையென்றால் தேவாரத்தை மீட்டெடுத்த தில்லைக் கோயிலிலேயே அதனைப் புதைப்பதற்கு தீட்சிதர்களால் இயன்றிருக்குமா?<br /><br /><br />சிற்றம்பலத்தில் தமிழை ஏற்ற, தாய்மொழியில் இறைவனைப் போற்ற பக்தனுக்கு அரசாணையின் துணை எதற்கு? போலீசின் துணைஎதற்கு?<br /><br /><br />சட்டம் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையைப் பயன்படுத்தும் உணர்வை வழங்க முடியாது. அந்த உணர்வென்பது பக்தி உணர்வல்ல. பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான சுயமரியாதை உணர்வு. சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிரான சமத்துவ உணர்வு. சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு எதிரான தமிழ் உணர்வு.<br /><br /><br />தில்லையில் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி ஒரு துவக்கப்புள்ளி. தீட்சிதர்கள் சரணடையவுமில்லை, சாதி ஆதிக்கத்தை விடவுமில்லை. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவர் ஒரு அவமானச் சின்னமாக இன்னும் நின்று கொண்டிருக்கிறது. அது தகர்க்கப்பட வேண்டும். தீட்சிதர்கள் திருடிக்கொண்ட தில்லைக் கோயிலை அறநிலைய ஆட்சித்துறை கைப்பற்ற வேண்டும்.<br /><br /><br />சமஸ்கிருத வழிபாட்டை அகற்றுதல், தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல்... என நீண்டதொரு போராட்டத்தை நாம் நடத்த வேண்டியிருக்கிறது. நடத்துவோம்!<br /><br /><br /><br />வர்க்கம், சாதி, இனம், மொழி, பாலினம் போன்ற ஒவ்வொரு துறையிலும் நிலவும் ஆதிக்கத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் போராடுவோம்! அன்று, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்து அரங்கநாதனைத் தீண்டினோம்! இன்று, சிற்றம்பலத்தைத் தீண்டியிருக்கிறது தமிழ்! எல்லாவகைத் தீண்டாமைகளையும் ஆதிக்கங்களையும் எதிர்த்துப் போராடுவோம்!<br />உங்கள் துணையுடன் வெற்றியும் பெறுவோம்!<br /><br />இவன்<br /><strong><u><span style="font-size:130%;color:#cc0000;">மக்கள் கலை இலக்கியக் கழகம்<br />விவசாயிகள் விடுதலை முன்னனி<br />புரட்சிகர மாணவர்...இளைஞர் முன்னனி<br />புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி<br /></span></u></strong><br />தொடர்புக்கு:<br />இரா. சீனிவாசன்,<br />#16, முல்லைநகர் வணிக வளாகம்,<br />2 ஆவது நிழற்சாலை,<br />அசோக்நகர்,<br />சென்னை 600083.<br /><strong>தொலைபேசி: 23718706<br />கைபேசி: 9941175876.</strong>பகத்http://www.blogger.com/profile/04440500903645450578noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8215438558782814699.post-30684623745737916952008-02-18T04:42:00.000-08:002008-02-18T06:33:21.361-08:00கருத்தரங்கம்<p align="center"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmVNn9pk7P7uETjMMPgTwASJmbQj-dRfH9i6g51dBZK0rUJuehVjlA6tW78x6GQEnUSrYG_cHdJFQ_BOgtDBe3E9Je3zOgUtl669nNrfhh-t1fDpMRvNdVFnGoPkxrB7iVloFbm7GT5r0/s1600-h/Nepal_Maoist.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5168319547972247954" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmVNn9pk7P7uETjMMPgTwASJmbQj-dRfH9i6g51dBZK0rUJuehVjlA6tW78x6GQEnUSrYG_cHdJFQ_BOgtDBe3E9Je3zOgUtl669nNrfhh-t1fDpMRvNdVFnGoPkxrB7iVloFbm7GT5r0/s400/Nepal_Maoist.jpg" border="0" /></a></p><br /><br /><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCfWn5INjAaSRbiFL-me3JYPHqJLAvaNtrsYBOvBl5lGdf1_H39az6zvz6D-nEDae-ORqaNIngVBvyYxE2cLsqw102pF5tIsYNQjYcM2ro9gKLM4DjFvYWn3xkgMjmCNBAoQvezNkFu0U/s1600-h/maas+red.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5168319109885583746" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCfWn5INjAaSRbiFL-me3JYPHqJLAvaNtrsYBOvBl5lGdf1_H39az6zvz6D-nEDae-ORqaNIngVBvyYxE2cLsqw102pF5tIsYNQjYcM2ro9gKLM4DjFvYWn3xkgMjmCNBAoQvezNkFu0U/s400/maas+red.jpg" border="0" /></a><br /><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_tE17lxyZPFPxH8na0D2F6aYQ4w_fALmlli81C1d4xL2Nv89WUmTp_Gq3qkv5qyKXAfJOH7orMe2wRPsSA8NysP4_9zmbDPxqCY-tTpl6amOpz7619FRGkM1m-eaO7MMZVrYzwrJw_dk/s1600-h/girl.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5168318512885129586" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_tE17lxyZPFPxH8na0D2F6aYQ4w_fALmlli81C1d4xL2Nv89WUmTp_Gq3qkv5qyKXAfJOH7orMe2wRPsSA8NysP4_9zmbDPxqCY-tTpl6amOpz7619FRGkM1m-eaO7MMZVrYzwrJw_dk/s400/girl.gif" border="0" /></a><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFhE433xWp3Is4oYiRM-ibvUpzMEfTHiBmrloV0jEiEUOZ2a-ppRQ3myD0lKeaDTa0h39scT1sF9DUwqo2lqTAxeheCFTf_p893FwNV6srtpciMUAm6RsxE8rs4u4NpJrP39bXv-HaK1Y/s1600-h/thozarkal.jpg"></a><br /><br /><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA9DO42QHlFBF7l1f8Xyb7jXMlne_CLUOvJzUlszTtRv4IZnckRIULmbrad9oiWUJ14zWJ-uog1ffPXVAGviNhbnA_ppU-chBKYT2GO4bfKCcaJdJOrP1Sw5EDVgfjTiXwwFqk0w4cqxc/s1600-h/child.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5168318027553825106" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA9DO42QHlFBF7l1f8Xyb7jXMlne_CLUOvJzUlszTtRv4IZnckRIULmbrad9oiWUJ14zWJ-uog1ffPXVAGviNhbnA_ppU-chBKYT2GO4bfKCcaJdJOrP1Sw5EDVgfjTiXwwFqk0w4cqxc/s400/child.jpg" border="0" /></a><br /><br /><br /><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjareaDmBbZxgXSFMicWaB6SXfHP9qkYiIcwVv8967bTUeEZgaCt-gUhaC1ITYjRyuj0jeNshf8K4GY88FnMJUIyfM9jfYXFBdYtisAxgdWoL7gb2B5FYs1NJLdHfpHlNvGW8GVXXTuo38/s1600-h/Nepal_Maoist.jpg"></a><br /><br /><br /><br /><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwkVDqas7FIOO-Ml8Zh2AT3OsSswCpSSO68i7vZWNn7rlx89KDNI4e1yPSy9fdm7dcgJTxgNaoym8TwqRLcD01H3q6ffvtts9VEPkCUHOLX6MZtJa2WbcAIac-TyrDpt4pyR0rYZHthyphenhyphenc/s1600-h/Nepali%20women.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5168316876502589746" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwkVDqas7FIOO-Ml8Zh2AT3OsSswCpSSO68i7vZWNn7rlx89KDNI4e1yPSy9fdm7dcgJTxgNaoym8TwqRLcD01H3q6ffvtts9VEPkCUHOLX6MZtJa2WbcAIac-TyrDpt4pyR0rYZHthyphenhyphenc/s400/Nepali%2520women.jpg" border="0" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ0sbdM_cPHGB6wsL9XaOhMdczyIZsUlANCV16uDXQXebRRt6a-3Ji_HsRNl8edpPtn-sJAJjgm6nBwI5ZgKAVk_02cYxmbmMNXKd1HZPmmb95hfVlmn8yUdUNDUqy-PugYLue5aWfYfU/s1600-h/art.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5168311138426282242" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ0sbdM_cPHGB6wsL9XaOhMdczyIZsUlANCV16uDXQXebRRt6a-3Ji_HsRNl8edpPtn-sJAJjgm6nBwI5ZgKAVk_02cYxmbmMNXKd1HZPmmb95hfVlmn8yUdUNDUqy-PugYLue5aWfYfU/s400/art.bmp" border="0" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><div><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi43eVrO92QhSYwcGnjT7Z8GoSNfMhPa92O9Gg-TXmzqrhgAulbBawlKhN_dFpNN4tefTq3HhUuqnx2Vl_aIWKIClC_uugp971AmiZQk8K_Zpq5MpS8xYJy5E0jkd63Us2WwAl2mY3ZSyY/s1600-h/flag.jpg"></a><br /><br /><br /><br />பிப்ரவரி 19, 2008 செவ்வாய், மாலை 4 மணி</div><div>பத்மா ராம் மகால் (ராம் தியேட்டர்)</div><div>83, N.S.K சாலை,கோடம்பாக்கம்,சென்னை- 24</div><div></div><div></div><div><strong><span style="color:#990000;"></span></strong> </div><div><strong><span style="color:#990000;"></span></strong> </div><div><strong><span style="color:#990000;">இந்திய நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்</span></strong></div><div></div><div></div><div></div><div></div><div></div><div></div><div> </div><div>தலைமை :</div><div><strong><span style="color:#ff0000;">சு.ப.தங்கராசு</span></strong></div><div>பொதுச்செயலாளர்,</div><div>பு.ஜ.தொ.மு,</div><div>அனைத்திந்திய செயற்குழு உறுப்பினர்,</div><div>இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்</div><div></div><div></div><div>உரையாற்றுவோர்:.</div><div><strong><span style="color:#ff0000;"></span></strong> </div><div><strong><span style="color:#ff0000;">நீண்ட பயணம் சுந்தரம்</span></strong></div><div>மாநிலச் செயலாளர் இ.பொ.க (மா.லெ)..</div><div></div><div></div><div><strong><span style="color:#ff0000;"></span></strong> </div><div><strong><span style="color:#ff0000;">தமிழேந்தி</span></strong></div><div>மார்க்சிய - பெரியாரிய பொதுவுடமைக் கட்சி,..</div><div></div><div></div><div><strong><span style="color:#ff0000;"></span></strong> </div><div><strong><span style="color:#ff0000;">இல.கோவிந்தசாமி</span></strong></div><div>செயலாளர் இ.பொ.க (மா.லெ) செங்கொடி..</div><div></div><div></div><div><strong><span style="color:#ff0000;"></span></strong> </div><div><strong><span style="color:#ff0000;">சங்கர சுப்புவழக்குரைஞர்,</span></strong></div><div>மாநிலத்தலைவர்,</div><div>இந்திய மக்கள் வழக்குரைஞர்கள் சங்கம்...</div><div></div><div></div><div><strong><span style="color:#ff0000;"></span></strong> </div><div><strong><span style="color:#ff0000;">சாந்திர பகதூர்</span></strong> </div><div>மத்தியக் குழு உறுப்பினர்,</div><div>நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்புக் குழு,..</div><div>இந்தியா.</div><div></div><div></div><div><strong><span style="color:#ff0000;"></span></strong> </div><div><strong><span style="color:#ff0000;">ஏ.எஸ். குமார்</span></strong></div><div>மாநில துனைத்தலைவர்,A.I.C.C.T.U..</div><div></div><div></div><div><strong><span style="color:#ff0000;"></span></strong> </div><div><strong><span style="color:#ff0000;">த.வெள்ளையன்</span></strong></div><div>தலைவர்,</div><div>தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை...</div><div></div><div></div><div><strong><span style="color:#ff0000;"></span></strong> </div><div><strong><span style="color:#ff0000;">பெ.மணியரசன்</span></strong></div><div>பொதுச் செயலாளர்,</div><div>தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி...</div><div></div><div></div><div><span style="color:#ff0000;"><strong></strong></span> </div><div><span style="color:#ff0000;"><strong>தொல்.திருமாவளவன்</strong></span></div><div>பொதுச் செயலாளர்,</div><div>விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...</div><div></div><div></div><div><strong><span style="color:#ff0000;"></span></strong> </div><div><strong><span style="color:#ff0000;">தியாகு</span></strong></div><div>பொதுச் செலாளர்,</div><div>தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்...</div><div></div><div></div><div><strong><span style="color:#ff0000;"></span></strong> </div><div><strong><span style="color:#ff0000;">சுப.வீரபாண்டியன்</span></strong></div><div>பொதுச்செயலாளர்,</div><div>திராவிட இயக்கத் தமிழர் பேரவை...</div><div></div><div></div><div></div><div><strong><span style="font-size:130%;"><span style="color:#ff0000;"></span></span></strong></div><div><strong><span style="font-size:130%;"><span style="color:#ff0000;"></span></span></strong> </div><div><strong><span style="font-size:130%;"><span style="color:#ff0000;">மருதையன்</span> </span></strong></div><div>பொதுச்செயலாளர்,</div><div>மக்கள் கலை இலக்கியக் கழகம்...</div><div></div><div></div><div> </div><div>சிறப்புரை:</div><div><span style="font-size:130%;color:#ff0000;">பவன் பட்டேல்</span></div><div>செயலாளர், </div><div>இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்.</div><div></div><div></div><div><span style="font-size:130%;color:#ff0000;"></span> </div><div><span style="font-size:130%;color:#ff0000;">லட்சுமண் பந்த்</span></div><div><span style="font-size:130%;color:#ff0000;"></span></div><div>செயலாளர்,</div><div>நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்புக் குழு,</div><div>இந்தியா.</div><div></div><div></div><div><span style="font-size:180%;color:#cc0000;"></span></div><div><span style="font-size:180%;color:#cc0000;"></span> </div><div><span style="font-size:180%;color:#cc0000;">சி.பி.கஜீரேல்</span></div><div>மத்தியக் குழு உறுப்பினர்,</div><div>நேபாள பொதுவுடமைக் கட்சி, (மாவோயிஸ்ட்)</div><div></div><div></div><div></div><div></div><div>நன்றியுரை:</div><div></div><div><strong><span style="color:#ff0000;"></span></strong> </div><div><strong><span style="color:#ff0000;">வ.கார்த்திகேயன்</span></strong></div><div>செயலாளர்,</div><div><strong><span style="color:#ff0000;">புரட்சிகர - மாணவர் இளைஞர் முன்னணி,</span></strong></div><div>சென்னை.</div><div></div><div></div><div> </div><div>தொடர்புக்கு:</div><div><strong><span style="color:#ff0000;">அ.முகுந்தன்,</span></strong></div><div><strong><span style="color:#ff0000;">புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,</span></strong></div><div>சென்னை - 24</div><div>அழைக்க - 94448 34519<br /></div><div>நன்றி.<a href="http://www.sivappualai.blogspot.com/">http://www.sivappualai.blogspot.com/</a><br />Related:<a href="http://poarmurasu.blogspot.com/2008/02/blog-post_14.html">முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டத்தை ஆதரித்து சென்னையில் அரங்கக் கூட்டம்!</a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /></div><div></div><div><br /><br /><br /><br /><br /></div><div><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjic516XyGNplb8wRFECr3gaqWWJ-RHJA24zUMEkSI-T6PsiDglEH9oW73IHw-ik8JTMJfAIWuXarKvg9gd1e9UUk5uX8QS_sCEKWbzCfDCjv_z5kHMnpmBfbBjJxmdDHkGykCYFFSZO34/s1600-h/Nepal_Maoist.jpg"></a><br /><br /><br /><br /><br /><br /><div><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjviGJ_cMBM3GtX4Fy6L5tqKvEHjCBAFpkHI6Ysy6CVdBjfrB_C-GjmaiIcTww-v-n8sM_dYlpNHBvxhti6jJv4BSk-8m6-0kkPn1Zv4OwY3WPQE6BBp3UOZuz6hqsQOE68RO7u6oVxniI/s1600-h/Nepal_Maoist.jpg"></a><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /><br /></div><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><div><br /></div><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div>சென்னை - 24</div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /></div><br /><br /><br /><br /><br /><br /><div><a href="http://poarmurasu.blogspot.com/2008/02/blog-post_14.html"></a></div></div></div></div>பகத்http://www.blogger.com/profile/04440500903645450578noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8215438558782814699.post-54355976939803254112008-02-02T23:30:00.000-08:002008-02-06T23:09:04.516-08:00இதுவன்றோ வீரம்<span style="font-family:arial;"><strong>கு</strong>ஜராத்</span> முஸ்லீம் படுகொலைகள் தொடர்பான வழக்கொன்றில், குற்றவாளிகளைத் தண்டித்து, மும்பாய் குற்றவியல் நீதிமன்றம் சனவரி மாத இறுதியில் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பானது, ரவுடிகள், மாஃபியா கும்பலைவிட, ஆர்.எஸ்.எஸ் இந்து மதவெறி பாசிஸ்டுகள் வக்கிரமான கிரிமினல் பேர்வழிகள்; பஞ்சமா பாதகத்தையும் செய்யத்துணியும் பயங்கரவாதிகள் என்பதையும்: மோடி அரசிற்கும், இப்படுகொலைகளுக்கும் நேரடித் தொடர்புண்டு என்பதையும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இன்னொருபுறம் இப்பயங்கரவாதிகளை எதிர்த்து மன உறுதியுடனும், துணிச்சலோடும் ஆறாண்டுகளாகப் போராடி வரும் பில்கிஸ் பானு என்ற வீராங்கனையையும் அடையாளம் காட்டியிருக்கிறது.<br /><br />பில்கிஸ்பானு, குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்டத்திலுள்ள ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்தவர். தனது கணவர் யாகூப் ரசூல், மூன்றரை வயது பெண் குழந்த சலேஹாவுடன் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது பிறந்த வீட்டிற்கு பில்கிஸ் பானு வந்திருந்தபொழுதுதான், குஜராத்தில் இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதல் வெடித்தது.<br /><br />ரந்திக்புர் கிராமத்தில் வசித்துவந்த முசுலீம்களின் 71 வீடுகளும்; அவர்களுக்குச் சொந்தமான 14 மளிகைக் கடைகளும்; வேறுசில பெட்டிக் கடைகளும் இந்து மதவெறிக் கும்பலால் முற்றிலுமாகத் தீக்கிரையாக்கப்பட்டன; அனைத்து முசுலீம் குடும்பங்களும் உயிரையாவது காப்பாற்றிக் கொள்ள, கிராமதைவிட்டு வெளியேறின.<br /><br />பில்கிஸ்பானுவும், தனது கணவர், குழந்தை, தாயார், இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளிட்டு தனது உறவினர்கள் 16 பேரோடு ரந்திக்புரிலிருந்து வெளியேறி, பரியா என்ற ஊரை நோக்கித் தப்பிச் செல்லத் தொடங்கினார். இந்து மதவெறியர்களின் கண்களில் அகப்பட்டுக் கொண்டுவிடாமல் பில்கிஸ்பானுவின் குடும்பம் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டிருந்த நேரத்திலே, அவரின் அத்தை மகளுக்கு குஜாவல் மசூதியில் பெண் குழந்தையும் பிறந்தது. இதற்கு மறுநாள் குத்ரா என்ற ஊருக்கு அவர்கள் வந்தபொழுது, அவ்வூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர்.<br /><br />அங்கு இரண்டு நாட்கள் பாதுகாப்பாக இருந்துவிட்டு, மூன்றாவது நாள் ஒவ்வொருவரும் பழங்குடியினர் போல வேடமணிந்து கொண்டு, குத்ராவில் இருந்து வெளியேறி, சாபர்வாட் என்ற கிராமத்திற்கு வந்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான வயல்வெளியில் பதுங்கியிருந்தனர்.அப்பொழுது அந்த வழியாக ஆயுதங்களுடன் சென்றுகொண்டிருந்த இந்து மதவெறிக் கும்பலிடம் பில்கிஸ்பானு குடும்பம் மாட்டிக் கொண்டது. அக்கும்பலில் இருந்த ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்த இந்து வெறியர்கள் பில்கிஸ்பானுவை அடையாளம் கண்டுகொண்டு, தங்களின் வக்கிரமான தாக்குதலை நடத்தினர்.<br /><br />ஷைலேஷ்பட் என்ற இந்து மதவெறியன் பில்கிஸ்பானுவின் குழந்தை சலேஹாவை அவரிடமிருந்து பிடுங்கி, அவரின் கண் எதிரிலேயே அக்குழந்தையை தரையில் அடித்துக் கொன்றான். பிறகு அவனும், அக்கும்பலைச் சேர்ந்த லாலா டாக்டர், லாலோ வக்கீல், கோவிந்த் நானா ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, பில்கிஸ்பானுவைக் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தினர் கர்ப்பமாக இருக்கும் தன்னைவிட்டுவிடும்படி பில்கிஸ்பானு கெஞ்சியதை, கதறியதை அக்கும்பல் காதிலாயே போட்டுக் கொள்ளவில்லை. தங்களின் காமவெறியைத் தீர்த்துக் கொண்ட ப்றகு, அக்கும்பல் பில்கிஸ்பானுவைத் தீர்த்துக் கட்டும் வெறியோடு தாக்கியதில், அவர் சுயநினைவு இழந்து விழுந்தார்.<br /><br />பில்கிஸ்பானு மட்டுமின்றி அவரின் தாயார், சகோதரிகள் உள்ளிட்டு எட்டுப் பெண்கள் அக்கும்பலால் பாலியல் பலாத்காரப்படுத்தப் பட்டனர். பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைவரும் கத்தியாலும், ஈட்டியாலும், குண்டாந்தடிகளாலும் தாக்கப்பட்டனர்.<br /><br />இரண்டு மூண்று மணி நேரம் கழித்து பில்கிஸ்பானுவிற்கு நினைவு திரும்பிய பொழுது, தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களும், நான்கு சிறுவர்களும் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டார்; மீதிப்பேர் இருந்த சுவடே தெரியவில்லை. பில்கிஸ்பானு, அந்தப் பலவீனமான நிலையிலும் நடந்து சென்று, வழியில் தென்பட்ட ஒரு பழங்குடி இனப் பெண்ணிடம் இரவலாக ஆடைவாங்கி அணிந்து கொண்டு, லிம்கேடா போலீசு நிலையத்திற்குச் சென்று இத்தாக்குதல் பற்றி புகார் கொடுத்தார். அப்பொழுதுதான், இந்து மதவெறிக் கலவரத்தின் சூத்திரதாரியாக மோடி அரசு இருப்பதை பில்கிஸ்பானு புரிந்து கொண்டார்.<br /><br />அப்போலீசு நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்த சோமபாய்கோரி, பில்கிஸ்பானு வாக்குமூலம் அளித்தபடி நடந்த சம்பவத்தைப் புகாராகப் பதிவு செய்யாமல், குற்றவாளிகளைக் காக்கும் நோக்கத்தோடு, ஒரு பொய்யான புகாரைப் பதிவு செய்தான். பில்கிஸ்பானுவைப் பரிசோதித்த மருத்துவர்களும், சம்பவம் ந்டந்த தேதி/நேரம், காயங்கள் பற்றிய குறிப்புகள் இன்றி, மொன்னையான அறிக்கையைத் தயார் செய்தனர். "குற்றவாளிகளை அடையாளம் காட்ட முயற்சி செய்தால், விஷ ஊசி போட்டுக் கொலை செய்துவிடுவோம்" என போலீசாரால் பில்கிஸ்பானு மிரட்டப்பட்டார்.<br /><br />இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காக நடத்தப்பட்ட கோத்ரா முகாமில், பஞ்ச்மஹால் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி ரவியைச் சந்தித்த பில்கிஸ்பானு, தனது குடும்பப் பெண்கள் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதையும்; தனது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும், சிறுவர்களும், தனது பெண் குழந்தையும் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதையும்; குற்றவாளிகளை அடையாளம் காட்டக் கூடாது என போலீசாரால் தான் மிரட்டப்பட்டதையும் கூறினார். இந்து மதவெறியர்கள் நடத்திய தாக்குதலில் தப்பிப் பிழைத்த பில்கிஸ்பானுவின் இரண்டு உறவினர்களும் சாட்சியம் அளித்தனர். இதனையடுத்து இச்சம்பவம் பற்றி மீண்டும் போலீசு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.<br /><br />எனினும், அவ்விசாரணை ஏனோ தானோவென்றே நடத்தப்பட்டு, ஒப்புக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் மிக விரைவாகவே பிணையில் விடப்பட்டனர். இவ்வழக்கின் முக்கிய சாட்சியன பில்கிஸ்பானு பலவழிகளில் மிரட்டப்பட்டதால், அவர் தலைமறைவாகப் போக நேர்ந்தது. குஜராத் படுகொலை தொடர்பான நூற்ருக்கணக்கான வழக்குகளைச் சாட்சியம் இல்லை என்று கூறி மோடி அரசு கைகழுவியபோது, கும்பலோடு கோவிந்தாவாக பில்கிஸ்பானு வழக்கையும் கைவிட்டது.<br /><br />இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பில்கிஸ்பானு. உச்சநீதி மன்றம், இவ்வழக்கை மேண்டும் புலன்விசாரணை செய்யுமாறு சி.பி.ஐ க்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. நடத்திய புலன்விசாரணையின் அடிப்படையில் அகமதாபாத் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. "சாட்சிகள் தொடர்ந்து மிரட்டப்படுவதால், இவ்வழக்கு குஜராத்தில் நடந்தால் நீதி கிடைக்காது; எனவே, வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்" எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தார், பில்கிஸ்பானு. இதனையடுத்து, இவ்வழக்கு மும்பய்க்கு மாற்றப்பட்டது.<br /><br />மும்பாய் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில், 20 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுள் இரண்டு மருத்துவர்கள், ஐந்து போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏழுபேர் நிரபராதிகளாகத் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுதே குற்றவாளி ஒருவர் இறந்து போனதால், மீதி 12 பேரில் 11 குற்றவாளிகளூக்கு ஆயுள் தண்டனையும்; பில்கிஸ்பானு அளித்த புகாரைப் பதிவு செய்ய மறுத்த போலீசு கான்ஸ்டபிள் சோமபய் கோரிக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.<br /><br />.......................<br /><br /><strong>பி</strong>ல்கிஸ்பானுவின் விடாப்பிடியான போராட்டத்தின் காரணமாகத்தான் இத்தீர்ப்பு கிடைத்திருக்கிறதேயொழிய, நீதிமன்ற முனைப்பின் காரணமாக இந்தச் சிறிய வெற்றி கிடைக்கவில்லை. இந்து மதவெறிக் கும்பல் இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை, தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, பக்கத்தில் இருந்த காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று புதைத்துவிட்டது. பில்கிஸ்பானுவின் மகள் சலேஹாவின் சடலம் எங்கோ மாயமாய் மறைந்து போனது. இதனைக் காட்டி, இப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என இந்து மதவெறிக் கும்பல் வாதாடியது.<br /><br />பில்கிஸ்பானுவின் உறவினர்களின் சடலங்களை இரண்டாம் முறை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக சி.பி.ஐ. தோண்டியெடுத்த பொழுது, அச்சடலங்கள் தலையற்ற முண்டங்களாக இருந்தன. சடலங்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகவே, அவ்வுடல்களில் இருந்து தலைகள் "மர்மமான" முறையில் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. சடலங்கள் விரைவாக அழுகிப் போய்த் தடயங்கள் மறைந்து போய்விடவேண்டும் என்பதற்காகவே, சடலங்களின் உடம்பு முழுவதும் உப்பு தடவப்பட்டிருந்தது.<br /><br />தாக்குதல் தொடர்பான முக்கியமான சாட்சியங்கள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பில்கிஸ்பானு மற்றும் அச்சம்பவத்தில் தனது தாயைப் பறி கொடுத்த மற்றொரு சிறுவனின் வாக்குமூலங்கள்தான், இவ்வழக்கிற்கே உயிர்நாடியாக இருந்தன. பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஷஹீரா ஷேக்கை மிரட்டிப்பணிய வைத்ததைப் போல, பில்கிஸ்பானுவையும் மிரட்டிப் பணியவைக்க முயன்றது, இந்து மதவெறிக் கும்பல். இதற்கொல்லாம் அஞ்சிவிடாத பில்கிஸ் பானு, கடந்த ஆறாண்டுகளாகத் தலைமறைவாக வாழ்ந்து கொண்டே, வழக்கையும் நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.<br /><br />குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை தர மறுத்துவிட்ட நீதிமன்றம், அதனை நியாயப்படுத, "அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை வழங்கமுடியும்; இக்குற்றவாளிகளுள் யார் யார் என்னென்ன குற்றங்களைச் செய்தார்கள் என்பது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை" என்று கூறியிருக்கிறது.<br /><br />குஜராத்தில் இந்து மத வெறி பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தில், ஏறத்தாழ 2,000 த்துக்கும் மேற்பட்ட அப்பாவி முசுலீம்கள், வக்கிரமான முறையில் தான் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமான பிறகும், நீதிமன்றம் பில்கிஸ்பானு வழக்கை ஏதோ தனித்ததொரு சம்பவமாகப் பிரித்து பார்த்திருப்பதே நாணயக்கேடானது. மேலும், இந்து மதவெறியர்கள் ஒவ்வொரு கலவரத்திலும், "கும்மலாகச் சென்று முஸ்லீம்களைத் தாக்குவது; முஸ்லீம் பெண்ககைப் பாலியல் பலாத்காரப்படுத்துவது" என்பதை ஒரு உத்தியாகவே செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், "இந்து மதவெறிக் கும்பல் எப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஏடுபட்டாலும் அவர்களின் உயிரை நீதிமன்றம் பறித்து விடாது" என்று உத்தரவாதமளிப்பதாகவே, இத்தீர்ப்பு அமைந்துள்ளது.<br /><br />குண்டு வைக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு சர்வ சாதாரணமாகத் தூக்கு தண்டனை அளிக்கும் இந்திய நீதித்துறை, கும்பல் வன்முறையில் ஈடுபடும் இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்குத் தண்டனை அளிக்கும் போதோ, "நிதானமாக" நடந்து கொள்கிறது. இந்திய நீதிமன்றங்களிடம் கானப்படும் இந்தக் காவிப் பாசத்தை நிரூபிப்பதற்கு ஏராளமார தீர்ப்புகளை ஆதாரமாகக் காட்ட முடியும்.<br /><br />இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மருத்துவர்களும், ஐந்து போலீசு அதிகாரிகளும், "தங்களின் கடமையை முறையாகச் செய்யாமல், நடந்த குற்றத்தை மூடி மறைத்து, இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கிறார்கள்" என நீதிமன்றமே ஒத்துக் கொண்ட பிறகும், "அவர்களுக்கு இச்சதிச் செயலில் பங்கில்லை" என்ற காரணத்தைக் "கண்டுபிடித்து" அவர்களை விடுதலை செய்திருக்கிறது. காவிமயமாகி வரும் இந்திய அதிகார வர்க்கத்திறிகு, இதைவிட இனிப்பான தீர்ப்பு வேறெதுவும் இருக்க முடியாது.<br /><br />இவர்களின் விடுதலையை எதிர்த்து மோடி அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார் பில்கிஸ்பானு. இந்தக் கோரிக்கை மோடிக்கு மட்டுமல்ல, "மோடியை இந்து மதவெறியன் அல்ல" எனச் சப்பைக்கட்டு கட்டும் "சோ" போன்ற நயவஞ்சகப் பேர்வழிகளுக்கும் விடப்பட்டுள்ள சவால்.<br /><br />..............<br /><br /><strong>தீ</strong>ர்ப்பு வெளிவந்த பிறகும், தான் தொடர்ந்து மிரட்டப்படுவதாகக் கூறியிருக்கும் பில்கிஸ்பானு, "இத்தீர்ப்பு முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு அரசுயலை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என நான் கருதவில்லை" எனப் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். தீர்ப்பு வெளிவந்த நாளன்று, ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்த 60 முஸ்லீம் குடும்பங்கள் தங்களின் பாதுகாப்பு கருதி, கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.<br /><br />இந்து மதவெறியர்களைத் தெருவில் எதிர்த்து நின்று பொராடக் கூடிய வலிமை கொண்ட ஜனநாயக இயக்கங்கள் இல்லையென்றால், நீதிமன்றத் தீர்ப்புகளால் முஸ்லீம்களைப் பாதுகாத்து விட முடியாது என்பதை அவைகள் உணர்ந்திருப்பதையே இவ்வெளியேற்றம் எடுத்துக் காட்டுகிறது. உண்மை இப்படியிருக்க, முதலாளித்துவப் பத்திரிக்கைகளோ, இத்தீர்ப்பைக் காட்டி, சட்டத்தின் மூலமே இந்து மதவெறியர்களைத் தண்டித்து விட முடியும்" என்ற மாயையைப் பரப்பி வருகின்றனர்.<br /><br />குஜராத் படுகொலை தொடர்பான 1,600 வழக்குகள் கடந்த ஆறாண்டுகளாக விசாரணை நிலையிலேயே உள்ளன. பில்கிஸ்பானுவைப் போல, எத்தனை சாட்சிகளால், தலைமறைவாக வாழ்ந்து கொண்டு, இந்து மதவெறியர்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுவிட முடியும்?<br /><br />இரண்டாம் உலகப் போரில் யூதர்களுக்கு எதிராக நாஜிகள் நடத்திய இனப் படுகொலையை விசாரிக்க நூரம்பர்க் நீதிமன்றம் அமைக்கப்பட்டதைப்போல, குஜராத் படுகொலையை விசாரிக்கவும் சிறப்பு நீதிமன்றக்ஙள் அமைக்கப்பட வேண்டும்; இப்படுகொலையை நடத்திய சங்பரிவார அமைப்புகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும். இதன் மூலம் மட்டும்தான், பதிக்கப்பட்ட முஸ்லீம்கள் அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.<br /><br />ஆனால், இந்தியக் 'குடியரசோ' இதனைச் செய்ய மறுத்து வருகிறது. எனவே, பில்கிஸ்பானு போராடி பெற்ற இத்தீர்ப்பை, மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றியாக இந்திய ஆளும் கும்பல் கொண்டாடத் துடிப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது.<br /><br /><span style="color:#cc0000;"><strong>"மேற்கண்ட கட்டுரை புதிய ஜனநாயகம் பிப்ரவரி/2008 இதழில் வெளியாகியிருக்கிறது."</strong></span>பகத்http://www.blogger.com/profile/04440500903645450578noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8215438558782814699.post-12231968241326412892007-10-30T12:23:00.000-07:002007-10-30T13:50:09.393-07:00இந்துத்துவத்தின் சோதனைச்சாலை<span style="color:#330000;"><strong><span style="font-size:180%;"><span style="font-family:times new roman;"><u>ரத்தம் தோய்ந்த செங்கல்......</u></span></span></strong><br /><strong><span style="font-family:Times New Roman;font-size:130%;color:#660000;"></span></strong></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"><strong>கொ</strong>திக்கின்ற - தார்ச்சாலையில் நிர்வாணமகக் கிடக்கிறாள் அந்தப் பெண் - பிணமாக. அவள் உடம்பிலிருந்து உரித்தெறியப்பட்ட சேலை அருகே சுருண்டு கிடக்கிறது. கிழித்தெறியப்பட்ட அவளது உள்ளாடையின் ஒரு பாதியை தவிப்புடன் இறுகப் பற்றியிருக்குறது அவளது இடது கை. உடலும் கையும் நசுங்கிச் சிவந்து ரத்தம் உறைந்திருக்கிறது. இடது தொடை முழுவதும் ரத்தம். உடலுக்கருகில் பரிதபமகக் கிடக்கிறது அவளது பிளாஸ்டிக் செருப்பு.</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">அருகே ரத்தமும், வெறுப்பும் தோய்ந்த ஒரு செங்கல். கொலைகாரர்கள் அவள் மீது எறிந்த இறுதி ஆயுதம், அதுவும் கிடக்கிறது.</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">அவளது பெயர் <strong>கீதாபென்</strong>. மார்ச் 25ம் தேதி அகமதாபாத்தில் அவளுடைய வீட்டு வாசலிலேயே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் வைத்து பட்டப்பகலில் அவள் கொடூரமாகக் கொல்லப்பட்டாள்.</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">அவள் ஒரு இந்துப் பெண். இருந்தும் ஒரு முசுலீம் இளைஞனைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் மாபாதகத்தைச் செய்துவிட்டாள். "அவனை ஒப்படைத்து விடு" என்று வீட்டு வாசலில் நின்று ஆர்.எஸ்.எஸ் காலிகள் மிரட்டிய போது ஒருபாறையைப் போல அவள் உறுதியாக நின்றாள் - கணவன் தப்பிச்செல்லும் வரை.</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">முசுலீமைக் காதலித்த குற்றம் அவன் உயிரைக் காப்பாற்றிய குற்றம். இந்த இரண்டு குற்றங்களுக்காகவும் அந்தக் கணமே, அங்கேயே அவள் நிர்வாணமாக்கப்பட்டு, நடுத்ததெருவில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாள். (செய்தி: Times of India, 19th April/2002).</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">கொதிக்கின்ற தார்ச்சாலையில்</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">நிர்வாணமாகக் கிடக்கிறாள்</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">அந்தப் பெண்.</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">கீதா பென்னின் </span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">உயிரைப் பறித்த செங்கல்</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">ஆயிரக்கணக்கான முசுலீம்களின் </span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">உயிரைக்குடித்த அதே செங்கல்</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">செங்கல் காவு கொண்ட </span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">கீதா பென்னின் உயிர்</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">காவுக்குத் தப்பிய </span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">அவள் கணவனின் உயிர் </span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">கீதாபென் - கள் பலர் </span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">குஜராத்தில் இருந்திருந்தால்</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">கீதா பென் </span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">நடுவீதியில் ஆடையின்றி </span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">பிணமாகக் கிடந்திருக்க</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">மாட்டாள்.</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">குஜராத்தும்</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">அம்மனமாக நின்று</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">அவளை வேடிக்கை </span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">பார்த்திருக்காது.</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">இந்து - முசுலீம் தம்பதியர். திருமணப் பதிவு அலுவலகத்தில்ருந்தும் பிற அரசு ஆவண்ங்களிலிருந்தும் இத்தகைய கலப்பு மனம் புரிந்தோரின் பட்டியலைச் சேகரித்துக் கையில் வைத்துக் கொண்டு தம்பதியரில் முசுலீமை மட்டும் கொலை செய்திருக்கிறது இந்து மதவெறிக்கும்பல். ஆனால் இது திடீரென்று நடக்கவில்லை.</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">கடந்த 15 ஆண்டுகளில் இந்து மதவெறி இயக்கங்களின் வளர்ச்சியையொட்டி குஜராத் சமூகத்தின் பண்பாடும் பாசிசம்யமாகி வந்திருக்குறது. மத மறுப்புத் திருமணத்தைக் கேலி செய்வது, இழிவு படுத்துவது, குடியிருக்க இடம் தராமல் தனிமைப்படுத்துவது ஆகியவை தொடர்ந்து நடந்திருக்கின்றன. இதனை முகாந்திரமாக வைத்தே பல முசுலீம் எதிர்க் கலவரங்கள் நடந்துள்ளன.</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">இவையனைத்திற்கும் மேலாக மாநில பாரதீயஜனதா அரசு ஆகஸ்டு'98ல் காவல் துறைக்கு அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு சுற்றறிகையை அனுப்பியது. "மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டுதான் இந்து முசுலீம் திருமண்ங்கள் ந்டைபெறுகின்றன்; எனவே, இத்தகைய எல்லாத்திருமணங்களையும் புலன் விசாரனை செய்யவேண்டும்" எனக் கூறி இதற்க்கென தனியே ஒரு போலீஸ் படையையும் அமைத்தது குஜராத் அரசு.</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">மதமாற்றம் செய்வோருக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கும் மசோதா ஒண்றை குஜராத் பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. நாடு முழுவதும் எழுந்த கண்டனங்களின் விளைவாகத் தற்காலிகமாக அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;">குஜராத் மாநிலத்தில் வாழும் கிறித்தவர்களையும் முசுலீம்களையும் மட்டும் கணக்கெடுப்பதற்கென்றே தனியாக ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் ஜனவரி'2000-ல் குஜராத் அரசு அறிவித்தது. குஜராத் உயர் நீதிமன்றம் இதற்குத் தடை விதித்துள்ளது. இருப்பினும் இந்த முடிவை அரசு வாபஸ் பெறவில்லை.</span><br /><span style="font-family:Times New Roman;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;font-size:130%;color:#660000;"><strong>கீதாபென்னும் திடீரெனக் கொல்லப்படவுமில்லை.</strong></span><br /><span style="font-family:Times New Roman;font-size:130%;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;font-size:130%;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;color:#333399;"><strong><em><u>புதிய கலாச்சாரம் மே-2002ல் வெளியானதிலிருந்து</u></em></strong></span><br /><span style="font-family:Times New Roman;font-size:130%;color:#660000;"></span><br /><span style="font-family:Times New Roman;font-size:130%;color:#660000;"></span>பகத்http://www.blogger.com/profile/04440500903645450578noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8215438558782814699.post-32402318416009509832007-10-29T10:27:00.000-07:002007-10-29T10:44:54.050-07:00நரேந்திரபேடியும் இந்துத்துவகேடிகளும்......<a title="Permalink" href="http://kaargipages.wordpress.com/2007/10/26/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/"><strong><span style="font-size:180%;">மோடியின் ராம ராஜ்ஜியம்</span></strong></a><br /><br /><strong>" சில நேரங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வார்த்தைகளைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இந்துத்துவ பாசிஸ்டுகளை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கும்.. ஆனாலும் உண்மைகளை ஒவ்வொரு முறை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகள் செத்துப் போகிறது. இதை எழுதும் போதோ கைகள் நடுங்குகிறது. இந்த பாசிஸ்ட் நாய்களின் குடலை உருவும் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஆற்றாமையில் தொண்டை விம்முகிறது. இந்த நாய்களைப் பாதுகாத்து நிற்கும் இந்த நீதி மன்றங்களையும்,அரசு இயந்திரத்தையும் நொறுக்கித் தள்ள முடியவில்லை இன்னும் என்கிற உண்மையால் வெட்கம் வருகிறது."</strong><br /><br /><br /><span style="color:#990000;">எல்லோருக்கும் தெரியும் நரேந்திர மோடி என்னும் கொலைகாரன் இரண்டாயிரத்தியிரண்டில் எப்படியெல்லாம் முஸ்லிம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தான் என்று. எத்தனையோ கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டது. எத்தனையோ முறை காறித்துப்பியாகி விட்டது.ஆனால் நம்மால் இது மட்டும் தான் முடிந்திருக்கிறது என்பது எத்தனைக் குறைவானதொன்று என்பது நேற்று தெகல்கா பத்திரிக்கை குஜராத்தின் கொலைகாரர்களின் பெருமிதம் ததும்பும் பேச்சுக்களை அம்பலத்திற்கு கொண்டுவந்தபோது புரிந்தது.</span><br /><span style="color:#990000;"></span><br /><br /><span style="color:#990000;">அந்தக் கொலைகள் வெறும் ஆத்திரத்திலோ சொந்த விவகாரங்களுக்காகவோ நடத்தப்பட்ட கொலைகள் அல்ல. அது ஒரு இன அழிப்பு! நேற்றுக் காண நேர்ந்த வீடியோக் காட்சி ஒன்றில் இந்துத்துவ வெறியன் ஒருவன் எப்படி கர்பவதியான ஒரு முஸ்லிம் பெண்மணியின் வயிற்றைக் கிழித்து இன்னும் உலகத்தைக் கூடகாணாமல் உறங்கிக் கிடந்த கருவை வெளியே எடுத்து கிழித்து எறிந்தோம் என்று சொன்னதைக் கேட்ட போது இந்த பாசிஸ்டுகளையும் இவர்கள் இந்த முறையில் அமைக்கப் போவதாய் அறிவித்திருக்கும் இராம ராஜ்ஜியத்தையும் இவர்கள் நாயகனான இராமனையும் இவர்கள் காட்டிய கொடூரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கொடூரத்தைக் காட்டி எதிர்த்தழிக்க வேண்டியதன் அவசியம் மண்டையில் உறைக்கிறது.</span><br /><span style="color:#990000;"></span><br /><br /><span style="color:#990000;">தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸைச் சேர்ந்த ஒரு வயதான முஸ்லிம் பிரமுகரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர் சில முஸ்லிம்கள். அந்த வீட்டை நாலாபுறமும் இருந்து சுற்றி வளைத்துக் கொண்ட இந்து வெறியர்கள், சுற்றிலும் தீ மூட்டி இருக்கிறார்கள். அந்தப் பிரமுகர் “வேண்டுமானால் பணம் கொடுக்கிறேன். தயவு செய்து எங்களைக் கொல்ல வேண்டாம்” என்று கெஞ்சி இருக்கிறார். “சரி பணத்தைக் கொடு விட்டு விடுகிறோம்” என்று கூறி வெளியே வருமாறு அழைத்திருக்கின்றனர். அவர் வெளியே வந்ததும் ஒருவன் அவரை உதைத்துக் கீழே தள்ளி இருக்கிறான். ஒருவன் அவர் கால்களை வெட்டியிருக்கிறான். நான்கைந்து பேர் சேர்ந்து அவரை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். ஒருவன்அவன் இரண்டு கைகளையும் வாளால் துண்டித்திருக்கிறான். பின்னர் அவருடைய பிறப்புறுப்பு அறுத்தெறியப்பட்டிருக்கிறது…. கடைசியில் அவரை உயிரோடு எரித்துக் கொன்றிருக்கிறார்கள்.இத்தனையையும் செய்தவர்கள், தெகல்காவின் காண்டிட் காமெராவின் முன் மிகவும் பெருமிதமாகச் சொல்லிப் பூரித்துப் போகிறார்கள்.<br />ஒருவன் தன்னுடைய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு சொல்கிறான், “முஸ்லிம் பெண்கள் பழங்களைப் போன்று இருந்தார்கள்… நாங்களெல்லாம் சுவைத்தோம்… வேண்டுமானால் வி.ஹெச்.பி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைக் கேட்டுப் பாருங்களேன்; அவர்களும் கூடத்தான் சுவைத்தார்கள். இதோ என் எதிரே சாமிப் படம் இருக்கிறது, என் அருகே என் மனைவி இருக்கிறாள்.. நான் பொய் சொல்ல மாட்டேன்; நானும் கூட ஒருத்தியை சுவைத்தேன்.. பின் அவளைக் கொன்றேன்” இவர்களுக்கு நல்ல சாவு வருமா? இவர்கள் இன்னும் உயிரோடு அலைவது என்பது மானமும் ரோஷமும் உள்ள நாகரீக மனிதன் எவனால் பொருத்துக் கொண்டிருக்க முடியும்?இவர்கள் இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகும் முறை இது தான்.<br />இதோ இது தான் ராம ராஜ்ஜியம்! இதைத்தான் இந்துத்துவ இயக்கங்கள் அமைக்கப்போவதாக சொல்கிறார்கள். இவர்களின் நாயகன் தான் ராமன். இவர்களைத்தான் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆதரிக்கிறாள். இவர்களைத்தான் ஒரு மாநிலத்தின் அத்துனை அரசு இயந்திரமும், அரசாங்கமும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தது. இவர்களில்ஒருவனான பாபு பஜ்ரங்கி என்பவனுக்குத் தான் நரேந்திர மோடி மவுண்ட் அபு என்னும் இடத்தில் இருக்கும் குஜராத்தி பவனில் ஐந்து மாதம் அடைக்கலமும் கொடுத்து, பின்னர் மூன்று நீதிபதிகளை மாற்றி விடுதலை செய்வித்தான். மேலே விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் நூறில் ஒரு சதவீதம் கூடக் கிடையாது. மேற்கொண்டு விவரிக்க எனக்கு மனதிடமும் கிடையாது.. ஆனால் இதைத்தான் இந்துக்களின் பதிலடி என்று அன்றைக்கு ஜெயலலிதா சொன்னதோடு மோடியை ஆதரித்து அறிக்கையும் விடுத்தாள்!</span><br /><span style="color:#990000;"></span><br /><br /><span style="color:#990000;">ஒட்டுமொத்த கொலைகளையும் பின்னிருந்து இயக்கியது மோடி. அத்தனைக் கொலைகளையும் மூடி மறைத்தது அம்மாநிலத்தின் அரசு இயந்திரங்களான நீதித்துறை, காவல்துறை. பொய் சாட்சிகளை உருவாக்கியது அரசு வழக்கறிஞர்கள்.. அதனை ஊக்குவித்தது நீதிபதிகள். தெளிவாகத் தெரிகிறது இந்த அரசு இயந்திரங்கள் யாருக்கானது என்று. ஒழித்துக்கட்டப்பட வேண்டியது பாஜாகா ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிஸ்டுகள் மட்டுமல்ல; மாறாக இவர்களுக்கு இந்த தைரியம் உண்டாவதற்குக் மூல காரணமான அரசு இயந்திரமும் தான்!</span><br /><span style="color:#990000;"></span><br /><br /><span style="color:#990000;">மக்களுக்கான நீதியை இந்த அமைப்புக்குள் தேடுவது எப்பேர்பட்ட மடத்தனம் என்பதை நேற்றுப் பார்த்த காட்சிகள் உணர்த்துகிறது. உயிரைக்காப்பாற்றிக் கொள்ள மறைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களை வி.ஹெச்.பியினருக்கு அடையாளம் காட்டிக் கொடுத்து ஆள்காட்டி வேலை செய்தது காவல் துறை. இவர்களைத் தான் நாம்இன்னும் நாம் நம்பப் போகிறோமா? “நீதி தேவைதையின்” முன்னே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டிய அரசு வக்கீலும், நீதிபதியும் தான் பொய் சாட்சிகளைத் தயார்படுத்தியது.. இவர்களைத் தான் நாம் நம்பப் போகிறோமா?<br />இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கான தண்டனையை இந்திய அரசு அமைப்பு கொடுக்காது. அதற்கான அருகதையோ யோக்கியதையோ அதற்குக் கிடையாது. கோவை குண்டு வெடிப்புக்காக முஸ்லிம்களுக்கு தண்டனை வழங்கிய அதே நீதித்துறை, அதற்கு சில மாதங்கள் முன்பு நடந்த நவம்பர் கலவரத்திற்குக் காரணமான பார்ப்பனத் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு இதே குஜராத் பாணியில் எங்கேயெல்லாம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கேயெல்லாம் அவர்களின் கடைகள் இருக்கின்றன என்பதை காட்டிக் கொடுத்து உதவிய காவல் துறையையும்ஏன் தண்டிக்கவில்லை?<br />அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். தண்டிக்கவும் முடியாது. இந்திய ஆளும் வர்கம் என்பது பார்ப்பன பயங்கரவாதிகளுக்குக் கொட்டை தாங்கும் வர்க்கம் என்பதைக் கண் முன்னாள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது நேற்றைய தெகல்கா வீடியோக்கள்.</span><br /><span style="color:#990000;"></span><br /><br /><strong><span style="font-family:trebuchet ms;color:#000000;">ஒரே நம்பிக்கை மக்கள் தான்! உழைக்கும் மக்கள் தான் இவர்களுக்கான தண்டனையை, இவர்களுக்கான தீர்ப்பை வழங்குவார்கள். இவர்கள் சொறி நாயைப் போல தெருவில் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். அதில் முதல் கல்லை நக்சல்பாரிகளே வீசுவார்கள்!</span></strong><br /><span style="color:#990000;"></span><br /><span style="font-size:180%;color:#3333ff;"><strong>தோழர். கார்க்கியின் kaargipages.wordpress.comல் தெறித்திருந்தவை.</strong></span>பகத்http://www.blogger.com/profile/04440500903645450578noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8215438558782814699.post-44242914651064385942007-09-26T23:14:00.000-07:002007-09-26T23:35:49.710-07:00செருப்பு விஜயம் !செருப்பு விஜயம் !<br />வழி விடுங்கள் வருகிறது செருப்பு<br />இனி வரும் ராமனின் பாலாடை<br />மேலாடை கிலுகிலுப்பை கோவணம்...<br /><br />சம்புகனின் சாம்பல் ?<br /><br />வராது வரலாற்று வழிநெடுக<br />வள்ளல்களின் கம்பர்கள் தான்<br />அஞ்சத் தேவையில்லை அருமை இந்துவே.<br /><br />அதோ...<br />அது தான் கோசலை மைந்தன்<br />கை விரல் சூப்பிய இடம்<br />இதோ...<br />அன்னவளை அன்னல் நோக்கிய இடம்<br />இது நுகந்த இடம்.<br /><br />இருக்கட்டும்.<br />குகனுடைய குடிசை ?<br /><br />அங்ஙனம் ஏதுமில்லை<br />அய்யன் திருவடி நிழலேஅவனுக்குச் சொந்தம்.<br /><br />கைவண்ணம் கண்டோம்<br />கடப்பாரை சேவையிலே<br />கால் வண்ணம் காட்டப்-புதுக்காலனிகள் வருகிறதோ ?<br /><br />அய்யன் பாதத்தின்<br />அளவென்ன அறிவீரா ?<br /><br />அளவை அறிந்து<br />ஆவது என்ன ?<br />அரசுகள் மாறா<br />அளவுகள் மாறும்<br />அன்றும் இன்றும்<br />ஆள்வது செருப்பே !<br /><br />வழிவிடுங்கள்<br />வருகிறது செருப்பு !<br /><br />-தோழர் துரை சண்முகம்<br /><br /> புதிய கலாச்சாரம்,<br /> செப்-அக்- 1992பகத்http://www.blogger.com/profile/04440500903645450578noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8215438558782814699.post-80754193291116851032007-07-24T09:30:00.000-07:002007-07-24T09:58:10.669-07:00பகுத்தறிவின் லீலைகள் வியந்தோதாய் உடன்பிறப்பே… தோழர். துரைசண்முகம்ஏய்! சாயிபாபாவெறுங்கையிலிருந்து விபூதியும் பூச்செண்டும்வரவழைத்தாயே! அதுவா அற்புதம்?வெயிலறியா உன் தலைமுடியிலிருந்துவிதவிதமாய் கடிகாரங்களை வரவழைத்தாயே!அதுவா அற்புதம்?<br /><br />பசியறியா உன் வயிற்றியிலிருந்துபலப்பல லிங்கங்களை வரவழைத்தாயே!அதுவா அற்புதம்?அடே! சாயிபாபாவழியறியா உன் காவிக் கஜானாவிலிருந்துகடைசியில் கருணாநிதியைவெளியே வரவழைத்தாயே!அதுவன்றோ அற்புதம்!!வீழ்ந்திற்றோ கொள்கைக் குன்று என்றுவிளங்காத உடன்பிறப்பே...இருநூறு கோடி எதிரே வருகையில்பெரியார் பார்வையா பார்க்க முடியும்?<br /><br />கொஞ்சம் பகுத்தறிவோடு பார்!யாருக்கும் தலைவணங்காத சுருள்முடியையேகோபாலபுரம் தன் காலடிக்கு வரவழைத்ததுஆன்மீகத்திற்கே பேரடி அல்லவா?அதிசயம் அல்லவா?<br /><br />அற்புதத்தில் விஞ்சி நிற்பதுபாபாவா? கலைஞரா? பார்!வெறுங்கையிலிருந்து நோக்கியாவைவரவழைத்தார்!<br /><br />இதோ... ஊமைகள் பேசுகிறார்கள்!காலிக் கஜானாவிலிருந்துகலர் டி.வி.யை வரவழைத்தார்!அதோ... குருடர்கள் பார்க்கிறார்கள்;வாயிலிருந்தே இரண்டு ஏக்கர் நிலத்தைவரவழைத்தார்!அதோ முடவர்கள் நடக்கிறார்கள்.அது மட்டுமா...?<br /><br />அணுவைத் துளைத்து, மலைகள் விழுங்கி,ஆழ்கடல் குடித்து ஆயிரமாய் விளைநிலங்கள் செரித்துகுறுகத் தறிக்கும் உலகமயப் பொதுமறையைஓவியமாய்த் தீட்டும் அற்புதம்அந்த பாபாவுக்கு வருமா?அவரா, இவரா?<br /><br />அற்புதத்தைத் தெரிவு செய்ய முடியாமல்திக்குமுக்காடி நெளிகிறது தெலுங்கு கங்கை.ஆசீர்வாதத்திற்குப் பயந்துஓடி ஒளிகிறது கூவம்!<br /><br />-<span style="color:#cc0000;"><strong>துரை சண்முகம்</strong></span><br /><br /><br /><br /><span style="font-size:130%;color:#cc0000;"><strong>சாமியார் வேடத்திலிருக்கும் அரசியல்வாதி - சாயிபாபாவுக்கும், அரசியல்வாதி வேடத்திலிருக்கும் சாமியார் கருணாநிதிக்குமான மான்ங்கெட்ட உற்வு குறித்த அற்புதமான இந்த கவிதை பிப்ரவரி/07 புதிய கலாச்சாரத்திலிருந்து.....உங்கள் பார்வைக்கு........</strong></span>பகத்http://www.blogger.com/profile/04440500903645450578noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8215438558782814699.post-2207499931819646272007-07-17T09:46:00.001-07:002007-07-17T10:22:14.378-07:00சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்ஆதவன் தீட்சண்யாசாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்ஆதவன் தீட்சண்யா<br />சாமிக்கண்ணு: பிரசரண்டு மகன் மருதுபாண்டியும் அவங்காளுங்க அஞ்சாறு பேரும் அன்னிக்கு (6.7.2003) காத்தால எங்கிட்ட வந்து உம்மவன் முருகேசன் எங்கே? பத்தாயிரம் ரூவா கடன் வாங்கிட்டு இன்னிக்கு நாளைக் கின்னு இழுத்தடிக்கிறான். எனக்கு இன்னிக்கு அவசரமா பணம் வேணும்னான். பத்தாயிரம் வாங்குற அளவுக்கு எம்மவனுக்கு ஒரு செலவுமில்லியேன்னு எனக்கு குழப் பம். எங்கயோ போயிருக்கான். வந்ததும் உங்ககிட்டு கூட்டியாறேன்னேன். அவன் வர்றவரைக்கும் காத்துனிருக்க முடியாது, நீ இப்பவே அவனை தேடிப் பிடிச்சு கூட்டியான்னு சத்தம் போட்டானுங்க. அவங்கப் பேச்ச தட்டமுடியுமா? சரின்னுட்டு எம்மவவூட்டுக்கு (வண்ணான்குடி காடு- குப்பநத்தத்துல இருந்து 25 கி.மீ. தூரமி ருக்கும்) போய் பாத்துட்டு அங்கயில்லன்னா எங்க சொந்தக்காரங்க ஊருங்களுக்கும் பையனோட படிச்ச வங்க வூடுங்களுக்கும் போய் தேடி இழுத்தாறலாம்னு கிளம்பிப் போயிட்டேன்.வேல்முருகன்: அன்னிக்கு காலையில் ஒரு கல்யாணத் துக்குப் போய்விட்டு வீடு திரும்பறப்ப என்னை வழி மறிச்ச மருதுபாண்டி எங்கடா உங்கண்ணன் முருகே சன்னு விசாரிச்சான். இங்கதான் எங்காவது இருப்பார்னு சொல்லிட்டு வூட்டுக்குப் போயிட்டேன். அண்ணனைத் தேடி எங்கப்பா போயிருக்கிறது எனக்குத் தெரியாது. கொஞ்சநேரம் கழிச்சு எங்க வீட்டுக்குள்ளாற புகுந்த மருதுபாண்டி கொடியில கழத்திப்போட்டிருந்த என் சட்டையை எடுத்து பாக்கெட்டைத் துழாவி அதிலிருந்த பஸ் டிக்கட்டையெல்லாம் பரிசோதிச்சான். எதுக்காக இப்படிப் பண்றேன்னு கேட்டேன். நெசமாவே உங்கண் ணன் எங்கயிருக்கான்னு உனக்குத் தெரியாதான்னான். நான் தெரியாதுன்னேன். அவன் பத்தாயிரம் ரூவா கடன் வாங்கியிருக்கான், இப்ப அவசரமா பணம் தேவை, அவனைக் காட்டுன்னு வற்புறுத்தினான். அவன் பேச்சிலி ருந்து வேறெதையும் என்னால யூகிக்க முடியல. சரி வா வெளியபோலாம்னு அவன் கூப்பிட்டதை நம்பி சட்டையைப் போட்டுட்டு அவனோடு ரோட்டுக்குப் போனேன்.ரோட்டோரத்திலிருந்த மோட்டார் ரூம் பக்கத்துல கூடியிருந்த அவங்க சாதிப்பையன்களோட சேர்ந்து என்னை அந்த ரூமுக்குள்ள தள்ளினான். பக்கத்து மைதானத்துல பந்து விளையாடிக்கிட்டிருந்தவங்களும் சேர்ந்துக்கிட்டாங்க. உங்கண்ணன் எங்க இருக்கான்னு சொல்லப்போறியா இல்லையான்னு கேட்டு என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்கண்ணன் எங்க போயிருக் கார்னு தெரியல.. வந்ததும் விசாரிச்சு பணம் வாங்கி யிருந்தா திருப்பித்தர ஏற்பாடு பண்றேன்... என்னை அவுத்து விடுங்க..ன்னு கெஞ்சினேன். யாரும் இரங்கல. அடிதாளாம கதறிக்கிட்டிருந்தேன். சித்தப்பா அய்யா சாமிக்கு எப்படியோ விசயம் தெரிஞ்சு ஓடிவந்து என்ன ஏதுன்னு அவங்கள விசாரிச்சார். முருகேசனை தேடிக் கொண்டாறது என்னோட பொறுப்பு, இவனை அவுத்து வுடுங்கன்னு கேட்டதுக்கு மொதல்ல அவனைக் கூட்டிவா, அப்புறம் பாக்கலாம்னு மறுத்துட்டாங்க.அய்யாசாமி (தற்போது குப்பநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர்): நான் எதிர்பாத்த மாதிரியே முருகேசன் வண்ணான்குடி காட்ல அவங்கக்கா வூட்லதான் இருந்தான். எங்கயோ போயிட்டு அவனும் அப்பதான் அங்க வந்து சேர்ந்தானாம். அவங்கப்பாவும் (எங்கண் ணன்) அங்கதான் இருந்தார். நடந்த விசயத்த சொல்லி நீ வந்தாத்தான் உன் தம்பி வேல்முருகனை விடுவிப்பாங்க, உடனே கிளம்புடான்னு முருகேசனை வண்டியில ஊருக்கு அழைச்சினு வந்துடலாம்னு ரெடியாகிறப்ப சாயங்காலம் ஆறுமணி வாக்குல வேல்முருகனை விடுவிச்ச தகவல் கிடைச்சதால இப்ப உடனே போகவேணாம் காலையில போலாம்னு அங்கயே தங்கிட்டோம்.மறுநாள் (7.7.2003) சாயங்காலம் முருகேசனோட நாங்க புதுக்கூரைப்பேட்டைக்கு திரும்பறதுக்குள்ள மருத பாண்டி ஆளுங்க எங்க வீட்டுக்கிட்ட வந்து பொம்ப ளைங்ககிட்ட தகராறு பண்ணிக்கிட்டிருந்தாங்க. முரு கேசனை வேறஇடத்துல நிக்கவச்சுட்டு அவங்ககிட்டப் போனேன். என்னைப் பாத்ததும் முருகேசன் எங்கன்னு அடிக்க வந்தானுங்க. முருகேசன் பணம் வாங்கலங் கிறான் சொல்றான். நீங்க எதுக்கு இங்க தகராறு பண்றீங் கன்னேன். இல்ல அவனைக் காட்டு நாங்க பேசிக்கி றோம்னு ஒரே தள்ளுமுள்ளு. போய் முருகேசனை கூப்பிட்டேன். வர்றதுக்கு தயங்கினான். பணம் வாங்க லன்னா நேர்ல வந்து நான் வாங்கலன்னு சொல்லிட்டு வந்துடுன்னு நான்தான் ரொம்பவும் வற்புறுத்தி இழுத்துனுப் போனேன். வரமாட்டன்னு தயங்கின வனை நானே இழுத்துனு போயி அந்த படுபாவிங்க கிட்ட ஒப்படைச்சத நெனச்சாத்தான் இன்னமும் பதறது.பையனைப் பாத்ததும் மருதுபாண்டி, சோதி, கந்தவேல், ராமதாசுன்னு ஏழெட்டுப்பேர் வளைச்சுப் பிடிச்சு அடிக்க ஆரம்பிச்சானுவ. கடன் வாங்கியிருக்கான் பையனைக் கூட்டியான்னு சொன்னீங்க, கூட்டியாந்திருக்கேன். அதை விசாரிக்காம இப்படிப் போட்டு அடிச்சா என்னா அர்த்தம்னு தடுக்கப்போன என்னையும் அடிச்சானுங்க. துணியெல்லாத்தையும் கிழச்செறிஞ்சுட்டு அவனை வெறும் ஜட்டியோட நிக்கவச்சு அடிச்சானுங்க. என்னால தாங்கவும் முடியல. தடுக்கவும் முடியல. அவன் கை காலை கட்டினானுங்க. சொல்லுடா பொண்ண எங்க ஒளிச்சு வச்சிருக்கிறன்னு ஆணுபொண்ணு அத்தனையும் அடிக்குது. காறித்துப்பறவங்களும் கழுத்த நெறிக்கறவங் களும்... எங்கண்ணியும் என்தங்கச்சியும் (முருகேச னோட அம்மா, அத்தை) ஒடியாந்து தடுத்தாங்க. அவங்களுக்கும் அடி.எனக்கு ஒண்ணும் புரியல. முருகேசன் எனக்குத் தெரியாதுன்னே சொல்லிக்கிட்டிருந்தான். இவனை இப்பிடியே கேட்டுக்கிட்டிருக்கிறதால பிரயோஜனமில் லன்னு சொல்லிக்கிட்டு அங்கயிருக்கிற கொழாவுக் குள்ள அவனை தலைகீழா எறக்கி இழுத்து சேந்தினாங்க. (நிலக்கரி இருக்கான்னு சோதனை போடறதுக்காவ என்.எல்.சி.காரங்க இந்த ஏரியாவுல இந்தமாதிரி அங்கங்க கொழா போட்டுருக்காங்க. அதுல ஒன்னுதான் இது. 300 அடி ஆழமிருக்கும். குறுகலானதுதான். 16 அங்குலமோ என்னமோ சைஸ். அனாமத்துப் பொணங்க அதுக்குள்ள நிறைய கிடக்கும்னு ஒரு பேச்சிருக்கு.) ரண்டாவது தடவ ரொம்ப ஆழத்துல எறக்கி மேல இழுத்தப்பதான் ‘கண்ணகி மூங்கத்துறைப்பட்டுல எங்க சொந்தக்காரங்க வூட்டுல இருக்கு’ன்னான் முருகேசன். கண்ணகிங்கிறது பிரசரண்டு துரைசாமி மவ. மருது பாண்டியோட தங்கச்சி.அவ்வளதுதான், அவங்க எதிர்பார்த்த தகவல் கிடைச்சி ருச்சு, பையனை விட்ருவாங்கன்னு நெனைச்சேன். ஆனா வந்து வூட்டக்காட்டுடான்னு காருக்குள்ள என்னைத் தூக்கிப் போட்டுக்கிட்டு பத்து பத்துகால் மணிக்கு கிளம்பினாங்க. ராவோடராவா மூங்கத்துறைப் பட்டுக்கு போனோம். அங்கயிருந்து 100 மைல் வரும்.சின்னப்புள்ள: பையனை கட்டிப்போட்டு அடிக்கிறாங் கன்னு கேள்விப்பட்டு நானும் என் நாத்தனாரும் அங்க ஓடினோம். எம்புள்ளைய மன்னிச்சிருங்க சாமி... என் காடுகரை எல்லாத்தையும் உட்டுட்டு இந்த தெசைப் பக்கமே வராம எங்கியாச்சும் கண்காணாத தேசத்துக்கு ஓடிப்போயி பொழைச்சுக்கிறோம்... எம்புள்ளைய வுட்டு ருங்கன்னு கையடுத்துக் கும்புட்டு பிரசரண்டு கால்ல வுழுந்து கதறினேன். புள்ள வளக்கத் தெரியாத வல்லார ஓழின்னு திட்டிக்கிட்டே என்னையும் அடிச்சானுங்க. ஓடிப்போயிருன்னு துரத்தினாங்க. தம்புள்ள அடிவாங்கிச் சாகிறத ஒரு மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சிருந்து பாக்கற கெதி யாருக்கும் வரக்கூடாது. கண்ணகிக்கும் எம்மவ னுக்கும் பழக்கமிருக்கிறது முந்தியே தெரிஞ்சிருந்தா நாங்களே அவனை தடுத்து காப்பாத்தியிருப்போம். தெரி யாமப் போச்சு. அய்யாசாமிய ஏத்திக்கிட்டு கார் மூங்கத் தொறைப்பட்டுக்கு போனப்புறமும் முருகேசனை அடிக்கிறதை நிறுத்தல. பொண்ணு வந்து சேரட்டும். இவனை கொன்னு எரிச்சிடுவம்னு பேசிக்கிட்டாங்க. எதுக்கும் அஞ்சாத பாவிங்களாச்சே, செஞ்சாலும் செய்வா னுங்கன்னு பயந்து நாங்க ரெண்டுபேரும் எங்க சொந்தக் காரங்களோட விருத்தாச்சலம் போலிஸ் ஸ்டேசனுக்கு ஓடினம். ‘பறப்பையன் படையாச்சிப் பொண்ணைத் தொட்டா பாத்துக்கிட்டு சும்மா இருப்பாங்களா’ன்னு அங்கிருந்த போலிஸ்காரங்க என்னையவும் நாத்தனாரை யும் அடிச்சு விரட்டுனாங்க. இன்ன விசயம்னு நாங்க சொல்லாமயே இதுக்காகத்தான் நாங்க வந்திருக்கம்னு போலிஸ்காரங்க சொல்றாங்கன்னா அவங்களுக்கு ஏற்கனவே விசயம் தெரிஞ்சிருக்குன்னுதானே அர்த்தம்? இனிமே இவங்கக்கிட்ட நின்னு புண்ணியமில்லன்னு மறுபடியும் புதுக்கூரைப்பேட்டைக்கு ஓடியாறம். அங்க யாரையும் காணல. இருட்டுலயே தேடுறம். பிரசரண் டுக்கு பங்காளியோட முந்திரிக்காட்டுக்குள்ள வந்த சத்தத்தக் கேட்டு அங்கப் போய் பார்த்தா ஊரே தெரண்டு நிக்கிது. எம்பையன் நடுவுல. வாய்விட்டு அழவும் முடியாம நாங்க இருட்டுல மறஞ்சி நின்னிருந்தோம்.அய்யாசாமி: எங்க சொந்தக்காரங்க வூட்டுக்குள்ள (08.07.2003) ராத்திரி ஒன்னரை மணிக்குப் பூந்து தேடி கண்ணகிய இழுத்துப் போட்டுக்கிட்டு மூங்கத்துறைப் பட்டுல இருந்து வண்டி திரும்புச்சு. வழிநெடுக அந்தப் பொண்ணை பண்ணின சித்ரவதைய சொல்லிமாளாது. விடிகாலை 3மணி சுமாருக்கு புதுக்கூரைப்பேட்டை ஊருக்குள்ள போகாம வண்டி முந்திரித் தோப்புக்கு திரும்புச்சு. அங்க கைகால் கட்டி முருகேசனை கீழ தள்ளி யிருந்தாங்க. பொண்ணு கிடைச்சிட்டதால பையனை இப்பவாச்சும் விட்டுருவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அவன் விழுந்து கிடக்குற எடத்துக்குப் பக்கத்துல இருந்த ஒரு முந்திரிமரத்துல என்னையும் கட்டிப்போட்டாங்க. அந்த எடத்துலயிருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிற மரத் துக்கிட்ட அந்தப் பொண்ணை கட்டிப்போட்டுட்டு வெங்கடேசனை காவல் வச்சுட்டு இங்க வராங்க. அதுக்குள்ள விடிஞ்சு ஏழுமணியாயிருச்சு.முன்னாடியே திட்டம் போட்டு எல்லாம் தயார் பண்ணியிருக்கானுங்க. நமக்குத் தெரியல. சோதி, மணி, கோதண்டபாணி, மொளையான்- இவங்கல்லாம் முரு கேசனை அசையவுடாம அமுக்கிப் புடிச்சிக்கிட்டா னுங்க. கந்தவேல் டப்பா மூடிய கத்தியால கீறித் தெறந்து டம்ளர்ல விஷத்த ஊத்திக் கொடுத்தான். பொண்ணோட அண்ணன் மருதுபாண்டி முருகேசன் வாய்ல விஷத்த ஊத்தினான். என் கண்ணு முன்னாடியே எம்புள்ள சாகுது. மரமாச்சும் அசையும். என்னால அதுவும் முடி யாம கத்தறேன். அடுத்தாப்ல அந்தப் பொண்ணுக்கு ஊத்தப் பாக்குறாங்க. அது பல்லை இறுக்கி கடிச்சிக் கிட்டு வாயைத் தெறக்காம இருக்கு. அடிச்சு ஒதைச்சா லும் அது பிடிவாதம் குறையல. வாய் திறக்காததால அமுக்கிப் புடிச்சி காதுலயும் மூக்குலயும் விஷத்த ஊத்தி னாங்க. நம்ம பொண்ணாச்சே...வேண்டாம் பாவம்னு எரக்கப்பட்டுத் தடுக்க ஒரு ஆள் இல்ல. ஊரே தெரண்டிருக்க ரண்டு உசுரும் போயிருச்சு.ரண்டு பொணத்தையும் தூக்கிக்கிட்டு சுடலைக்கு போனாங்க. என்னையும் இழுத்துக்கிட்டுப் போனாங்க கூடவே. பொண்ணை அவங்க சாதி சுடுகாட்டுலயும் பையனை சுடுகாட்டுக்கு பக்கத்துல இருக்குற ஓடையிலயும் (சுடுகாடு தீட்டாயிடக்கூடாதுன்னு) போட்டாங்க. அங்க வெறகுக்கட்டை அடுக்கி எல்லாமே ரெடியா இருந்துச்சு. கொன்னது படையாச்சிங்களா இருந்தாலும் எரிக்கறது எங்காளுங்களோட வேலை தானே. புதுக்கூரைப்பேட்டை காலனி ஆளுங்க(எங்க சொந்தக்காரங்கதான்)தான் ரெண்டு பொணத்தையும் எரிச்சாங்க.அமராவதி (முருகேசனின் அத்தை): நானும் எங்கண்ணியும் எல்லாத்தையும் இருட்டுக்குள்ள இருந்து பாத்துக்கிட்டிருந்தோம். ஆனா ஒன்னும் பண்ண முடியல. விடிஞ்சி காத்தால ஏழுமணி சுமாருக்கு (8.7.2003) முருகேசனுக்கும் கண்ணகிக்கும் விஷத்தை ஊத்தி கொன்னு தூக்கிக்கிட்டு, கட்டிவச்சிருந்த எங்கண் ணன் அய்யாசாமியவும் கூட்டிட்டு சொடலைக்குப் போனாங்க. நானும் எங்கண்ணியும் மறஞ்சு மறஞ்சு பின்னால போனம். அப்ப சொடலைக்கு வந்த போலிஸ் காரர் (எஸ்.ஐ.யோ இன்ஸ்பெக்டரோ தெரியல) எரிஞ்சிக்கிட்டிருந்த முருகேசனை பூட்ஸ் காலால புரட்டிப் பாத்துட்டு எதுவுமே சொல்லாம கௌம்பிப் போயிட்டார். அதுக்கப்புறம் படையாச்சிங்களும் எரிய வுட்டுக்கிட்டிருந்தவங்களும் போயிட்டாங்க. நானும் அண்ணியும் பதைச்சுக்கிட்டு ஓடிப் பாத்தப்ப முருகேசன் வெந்து கரிக்கட்டையா கிடந்தான். நெஞ்சுக்கூடு மட்டும் வேகாம பொகஞ்சிக்கிட்டு இருந்துச்சு. நான் ஆத்தாமை யில அதை அப்படியே கையால அள்ளிட்டேன். கை யெல்லாம் பிசுபிசுன்னு என்னமோ ஒட்டுது. அவன வளக்க எங்கக் குடும்பம் எத்தினி கஷ்டப்பட்டிருக்கும்... வாழ்றதுக்குத்தான் கஷ்டப்பட்டம்னா செத்து முழுசா எரியறதுக்கும் குடுப்பினை இல்லாமப் போயிடுச் சேன்னு நெனைக்க நெனைக்க மனசே ஆறல.அப்பறம் நாங்க ரண்டு பேரும் அங்கயிருந்த செடிசெத்தைங்கள அரிச்சுப் போட்டு அது வேகற மட்டும் அங்கயே இருந்தோம். எரிஞ்சிருந்த அவன் கைவிரல்ல கருகிக்கிடந்த மோதிரத்தை எடுத்து எங்கண்ணிக்கிட்ட கொடுத்தேன். ஒரு தாய்க்கு அது போதுமா? அவ முருகேசனை பெத்தவ இல்ல சித்திதான்னாலும் எவ்வளவு பாசமா வளத்தா...சாமிக்கண்ணு: எம்புள்ள இனி இல்லன்னு ஆயிட்டான். எனக்கு கல்யாணமாகி ரண்டு வருசம் கழிச்சுத்தான் முருகேசன் பொறந்தான். அதுக்காவ நானும் அவங்கம்மா வும் வேண்டாத சாமியில்ல. போகாத கோயிலில்ல. அவன்பேர்ல குலதெய்வத்துக்கு நேர்ந்துட்ட பன்னி நெஞ்சளவுக்கு வளர்ந்திருந்துச்சு. ரெண்டு மாசம் கழிச்சு பொங்க வைக்கணும்னு இருந்தேன். அதுக்குள்ள எம் புள்ளையே இல்லன்னு ஆயிருச்சே... அவங்கம்மா செத்தப்புறம் ரண்டாந்தாரமா சின்னப்புள்ளய கட்டி புள்ளைங்க பொறந்திருந்தாலும் முருகேசன்மேலதான் நாங்க உசுர வச்சிருந்தம். எல்லாம் போச்சு.பழனிவேலு வக்கீலு கூப்பிட்டார்னு அவரோட பள்ளிக் கூடத்துக்குப் போனா அங்க ஒரு 500 பேர் இருக்காங்க. அவர் என்னை பத்திரத்துல கையெழுத்துப் போடுன்னார். எதுக்குன்னு கேட்டேன். எங்களுக் குள்ள சமாதானமா போயிடறம்னு எழுதியிருக்கு. போடுன்னார். எம் புள்ளைய என்ஜினீர் காலேஜ்ல சேக்க றதுக்கும் காலேஜ் செலவுக்கும் என் நிலத்தை விக்கிறதுக்கும் நீதான் கையெழுத்து வாங்கின. இப்ப புள்ளைய பறிகொடுத்துட்டு நிக்கற என்கிட்ட நீ கேக்குறதுல எதாச்சும் நியாயமிருக்கான்னு திட்டிட்டு வந்துட்டேன். அப்புறம் விடுதலை சிறுத்தை கட்சிக்காரங்க வந்து திருமா வளவனோட போன்ல பேச வச்சாங்க. அவர் ஸ்டேசனுக்கு பேசிட்டு மறு படியும் எங்களக் கூப்பிட்டு தைரியம் சொன்னார். போலிஸ் நடவடிக்கை எடுப்பாங்கன்னார். நேர்ல பாக்கறதுக் காக மெட்ராஸ் போனோம். அவர் பேப்பர்காரங்களைக் கூப்பிட்டு விசயத்தைச்சொன்னார்.அதுக்கப்புறந்தான் பேப்பருங்கள்ல விசயம் வந்துச்சி.விசயம் வெளியில தெரியுதுன்னதும் ஆத்திரப்பட்ட போலிஸ், துரைசாமி வகையறாவுல நாலுபேரையும் எங்காளுங்க நாலுபேரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. கொலைகாரங்கள அரெஸ்ட் பண்ணினா கரெக்ட். மகனை பறிகொடுத்த என்னையும் எங்க சொந்தக்காரங்க ளையும் எதுக்கு அரெஸ்ட் பண்ணனும்? இப்படியொரு அக்கிரமம் எங்கயும் உண்டான்னு நான் கேட்டதுக்கு அந்த எஸ்.ஐ. தமிழ்மாறன் என்னை லத்தியால அடிச்சான். கை வீங்கிருச்சு. உயிர்போற வலி. வைத்தியம் பண்ற துக்குக்கூட விடல. எங்களை மிரட்டிப் பணிய வைக்கிற துக்காவ, அவங்க பொண்ணை அவங்க கொன்னுட்ட மாதிரியும் எங்க பையனை நாங்களே கொன்னுட்ட மாதிரியும் ஜோடனையா கேஸ்போட்டு ரிமாண்ட் பண்ணி கடலூர் ஜெயில்ல அடைச்சிட்டாங்க. அப்புறம் ரத்தினம் ஐயா வந்துதான் என்னை வெளிய கொண்டாந் தார். வெளிய வந்து எட்டாயிரம் ரூவா செலவழிச்சு என் கைக்கு வைத்தியம் பண்ணினேன்.வழக்கறிஞர் ரத்தினம்: நக்கீரன்ல செய்திய பாத்துட்டுத் தான் நான் அந்த கிராமத்துக்கு வந்து இந்த குடும்பத்தைச் சந்திச்சேன். கொலைக்குற்றவாளிகளும் உள்ளூர் போலிசும் ஒரே சாதி. கொலைகாரனுங்க நல்ல வசதி யோட இருக்கிறதால லஞ்சத்துக்கும் குறையில்ல. அத னால முருகேசன் குடும்பத்தை மிரட்டி வழக்கை ஒன்னு மில்லாம செஞ்சுடலாம்னு நினைச்சாங்க. பாதிக்கப் பட்டவங்களையே குற்றவாளியாக்கி சிறையில அடைச் சது மட்டுமில்ல. முதல் குற்றவாளி துரைசாமி ஊராட்சி மன்றத் தலைவர், தொடர்ந்து முப்பதுநாள் சிறையிலி ருந்தா அவர் பதவி இழக்க நேரும்னு அரசு வழக்கறிஞர் சொன்னதை ஏத்துக்கிட்டு கடலூர் மாவட்ட நீதிபதி 23ம் நாள் அவரை ஜாமீனில் விடுதலை செஞ்சிட்டார். ஆனா மகனைப் பறிகொடுத்த சாமிக்கண்ணு 36வது நாள்தான் ஜாமீன்ல விடப்படறார். அந்தளவுக்கு நீதிமன்ற நடவடிக்கையும்கூட இவ்விசயத்தில கொலைகாரங்க ளுக்குத்தான் உதவியாயிருந்துச்சு. இனிமேல உள்ளூர் போலிசை நம்பமுடியாதுன்னு சென்னை உயர்நீதிமன்றம் போய் வழக்காடி வழக்கை 22.04.04 அன்று சி.பி.ஐக்கு மாத்தினோம்.அய்யாசாமி: இதுக்கிடையில விடுதலை சிறுத்தையில இருக்குற எங்க சொந்தக்காரன் ஊத்தங்கால் சண்முகம் ஒருநாள் வந்தான். இந்தாங்க அண்ணன் (திருமாவள வன்) பேசறார்னு செல்போனை என்கிட்ட கொடுத்தான். ‘கேஸ் அதுஇதுன்னு விசயத்தை பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்னார். எனக்கு திகீர்னு ஆயிருச்சு. என்ன இப்படி சொல்றீங்கன்னு கேட்டேன். அன்புமணி மூலமா ரொம்ப பிரஷர் தர்றாங்க... நீங்கதான் பக்குவமா முடிவெடுக்கனும்னு அவர் சொன்னதை என்னால நம்பவே முடியல. நான் போனை எங்கண்ணன் சாமிக்கண்ணுகிட்ட கொடுத்தேன்.சாமிக்கண்ணு: வழக்கை வாபஸ் வாங்கிடுங்கன்னார் திருமாவளவன். அதெல்லாம் வக்கீல் ஐயாதான் முடிவெ டுக்கனும்னு சொன்னேன். வழக்கு போட்டது நீங்க. இதுல வக்கிலுக்கு என்ன வேலை நடுவுல? நீங்க முடி வெடுங்க. ஒத்துக்கிட்டா பணம்கூட கணிசமா தர்றதா சொல்றாங்கன்னார் அவர். காசு வரும். எம்புள்ள வரு மான்னு கேட்டுட்டு போனை கட் பண்ணிட்டேன். அப்புறம் ஐயாவுக்கு போன்போட்டு விசயத்த சொன் னோம். அவர் இந்தப்பையன் சண்முகத்தைப் பிடித்து சத்தம் போட்டார். இந்த மாதிரி கட்டப்பஞ்சாயத்து வேலை செய்யற நெனப்பிருந்தா சொந்தக்காரன்னும் பாக்கமாட்டம்னு நாங்களும் திட்டி அவனை தொரத்தியுட்டோம்.வழக்கறிஞர் ரத்தினம்: தனவேல்னு ஒரு ஐ.ஏ.எஸ். ஆபிசர் இந்த புதுக்கூரைப் பேட்டைக்காரர். துரைசாமி குடும்பத்துக்கு நெருங்கின சொந்தமாம். அவர் இப்ப மந்திரி அன்புமணிகூட இருக்கிறதா சொல்றாங்க. (தனவேல் திருநெல்வேலி கலெக்டரா இருந்தப்பதான் மாஞ்சோலை தொழிலாளர்கள் 17 பேரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார்) அவர்மூலமா அன்புமணிய தொடர்பு கொண்டு கேஸை ஒன்னுமில்லாம பண்ணிடு வோம்னு இவங்கள மிரட்டறாங்க.அய்யாசாமி: அதுக்கப்புறம் விசாரிச்சதுல தெரிஞ்சது என்னன்னா, எங்காளுங்க நாலுபேர் மேலயும் கேஸ் போடறதுக்கு ஐடியா கொடுத்ததே விடுதலை சிறுத்தை கடலூர் மாவட்ட அமைப்பாளர் கருப்புசாமிதானாம். எங்க மேலயும் கேஸ்போட்டாத்தான் பயந்துபோய் பேச்சுவார்த்தைக்கு வருவோம்னு இந்த ஏற்பாடு. அப்பு றம் ஒருநாள் வி.சி. மாநில விவசாய அணி செயலாளர் திருச்சி கிட்டு கோர்ட்டுக்கே வந்து எங்ககிட்ட சமாதா னமா போகச் சொல்லி பேசினார். நாங்க முடியாதுன்னு சத்தம் போட்டு அனுப்பிட்டோம். பிறகு நெய்வேலி சிந்தனைச் செல்வன்.ரத்தினம்: சிபிஐ ஆரம்பத்துல ஒழுங்காத்தான் விசாரணை நடத்துச்சு. தலித்கள் பாதிக்கப்பட்டிருக்கிறதால விடு தலை சிறுத்தை பிரச்னை பண்ணும்னு பயப்பட வேண்டி யதில்லை, அதை படையாச்சிங்க சரிக்கட்டிட்டாங் கன்னு தெரிஞ்சோ அல்லது வேறு என்ன காரணமோ திடீர்னு குற்றப்பத்திரிகையில முருகேசனோட சித்தப்பா அய்யாசாமியை நாலாவது குற்றவாளியா சேர்த்தது சி.பி.ஐ. முருகேசன் வாயில விஷத்தை ஊத்தினது அய்யா சாமிதான்னு குற்றச்சாட்டு. கொலைக்குற்றவாளிகளான சாதிவெறியர்களை காப்பாத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தாரையே தண்டிக்கிற இந்த முயற் சியை கடுமையா எதிர்த்த பிறகு, நேரடி சாட்சி யாரும் இல்லாததாலதான் அவரை குற்ற வாளியா சேர்த்திருக்கோம். அவர் குற்றத்தை ஒப்புக்கிட்டு அப்ரூவராயிட்டா கேஸ் வலுவா யிடும். அவரை நாங்க விடுவிச்சுடுவோம்னு ஒரு வியாக்யானம் சொல்றாங்க. முருகேச னோட அம்மா சின்னப் புள்ளயும் அத்தை அமராவதியும் கொலையை நேரடியா பாத்த வங்க. அவங்களை சாட்சியா போடலாம். ஆனா சிபிஐ மறுக்குது.தலித்களை பணிய வைக்கிறதுக்கு பாதிக்கப் பட்ட அவங்க மேலயும் கேஸ் போட்டுவழிக்கு கொண்டு வரணும்கிறதுதான் இதோட நோக்கம். இப்ப குற்றப்பத்திரிகையிலிருந்து அய்யாசாமியை விடுவிக்க சட்டரீதியா போராட வேண்டியிருக்கு. (இந்த சிபிஐ டீம் தான் கயர்லாஞ்சி படுகொலையை விசாரிக்கப் போனது. ஊரறிய அங்கே நடந்த பாலியல் வன்முறைகளை மறைச்சு அப்படியேதும் நடக்கலன்னு அறிக்கை கொடுத்திருக்கு)வேல்முருகன்: விசயம் இத்தோட முடியல. தொடர்ந்து அவங்க எங்களுக்கு பலவிதமா நெருக்கடி தர்றாங்க. படையாச்சிங்கள தாக்கினதா எங்கண்ணன் பழனிமுரு கன் மேல ஒரு பொய்வழக்கு. போகிப்பண்டிகை அன்னிக்கு ராத்திரி நான் காலேஜ்ல இருந்து பொங்கல் லீவுல வீட்டுக்கு வந்தேன். ராத்திரி ஒன்னரைமணிக்கு வீட்டு கதவை உடைச்சு உள்ளே வந்த அண்ணாத்துரை யும் மத்த போலிஸ்காரங்க அஞ்சு பேரும் எங்கடா உங்கண்ணன்னு கேட்டு என்னை அடிச்சு இழுத்துப் போனாங்க. ஸ்டேசனுக்குப் போயும் அடி. பழனிமுருகனை ஒப்படைச்சிட்டு இவனை கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிட்டாங்க. ரத்தினம் ஐயா தலை யிட்ட பின்னாடிதான் நான் வெளிய வர முடிஞ்சது. பழனி முருகன் கண்டிசன் பெயில்ல ஸ்டேசனுக்கு கையெழுத்துப் போட தினமும் போயிட்டு வர்றார்.பழனிமுருகன்: கையெழுத்துப் போட உள்ள போனா ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமா மிரட் டல். பத்து மணிக்கு முன்னாடியும் வரக்கூடாது பின்னாடியும் வரக் கூடாது... இன்னிக்கு காலையில போனப்ப, என்னடா ஐகோர்ட் வக்கீல் சப்போர்ட் இருக்குன்னு ஆட்டம் போடறீங்களா... ரவுடி லிஸ்ட்ல சேர்த்து என்கவுண்டர்ல போட்டுத் தள்ளிருவோம்னு எஸ்.ஐ. பழமலை மிரட்டுறார். இன்னம் ரண்டுநாள் எப்படி அங்க போயிட்டு வர்றதுன்னே தெரியல.அய்யாசாமி: இவன் எங்கக்கா மகன். ( காதைச் சுற்றி கட்டு போட்டுக் கொண்டிருந்தார்) நேத்து இவனை வழி மறிச்சு தகராறு பண்ணி மமுட்டி யால வெட்ட வந்திருக்கான் ஒரு படையாச்சிப் பையன். ஒதுங்கி தப்பிச்சிட்டான். ஆத்திரம் அடங்காம கத்திய வீசியிருக்கான். இவன் தலைய சாய்ச்சதுல கத்தி பட்டு காதறுந்துருச்சி. ஸ்டேசனுக்குப் போனா அவன் வெட்டு வான்னு தெரியுமில்ல, அங்க எதுக்குப் போனேன்னு கேக்குறாங்க. கடைசில இவன் மேலயே கேஸ் போடறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காங்க.வேல்முருகன்: பஸ்கூட இல்லாத இந்த ஊர்ல பொறந்து வளந்து ஒரு தலித், பி.இ பட்டதாரியா உருவாகறது எவ்வளவு கஷ்டம்? படிப்பு முடிஞ்சதும் பெங்களூர்ல வேலை கிடைச்சது. அப்பவே ஏழாயிரம் சம்பளம். கெமிக்கல் இன்ஜினியரிங் முடிச்சிருந்ததால அவர் இன்னிக்கெல்லாம் இருந்திருந்தா எவ்வளவோ பெரிய வேலைக்கெல்லாம் போயிருக்க முடியும். அவ்வளவை யும் ஒருநொடியில காலியாக்கிட்டாங்க. எங்கண்ணன் கொலைக்கு நியாயம் கேட்டு நாங்க உறுதியா இருக்கறத அவங்களால சகிச்சுக்க முடியல. அதனால தொடர்ந்து அவங்க எங்களுக்கு தொல்லை கொடுக்கறாங்க. எல்லாத்தையும் தாங்கிக்கிறதுன்னு முடிவோட இருக்கோம்.(18.02.2007 அன்று பேரா.அய்.இளங்கோவன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, வழக்கறிஞர்கள் லூஸி, செபாஸ்டியன், ரஜினிகாந்த், மங்கம்மாள், செங்கொடி, மூர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய உண்மை அறியும் குழு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் குப்பநத்தம் கிராமத்திற்கு சென்று கொலையுண்ட முருகேசன் குடும்பத்தாரை சந்தித்து திரட்டிய தகவல்கள் இவை. என்எல்சி தோண்டியிருக்கும் குழாய், விஷம் புகட்டப் பட்ட இடம், எரிக்கப்பட்ட இடம் என கொலையோடு தொடர்புடைய இடங்களை பார்வை யிட்டோம். எரிக்கப்பட்ட ஓடையில் அதற்கான சுவடுகளே இல்லை. ஏற்க னவே அங்கு கிடைத்த முருகேசனின் ஒன்றிரண்டு எலும்புகள் வழக்குக்காக பாதுகாக்கப்படுவதாக அறிந்தோம்.தமது சொந்த ஊரான குப்பநத்தத்தில் உறவினர்களோடு ஏற்பட்ட மனஸ் தாபத்தினால் புதுக்கூரைப்பேட்டை தலித் காலனிக்கு குடிபெயர்ந்திருந்த சாமிக்கண்ணு குடும்பம் முருகேசன் கண்ணகி படுகொலைக்குப் பிறகு குப்பநத்தத்திற்கே திரும்பிவிட்டது. முருகேசனின் தம்பி வேல்முருகன் (திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்) வழக்கில் உறுதியாயிருப் பதால் அவரும் சாதி வெறியர்களின் இலக்காகியிருக்கிறார்.மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஆறு தலித்கள் கொல்லப்பட்ட வழக்கில் - கொலை மிரட்டலுக்கும் அஞ்சாது- தலித்களுக்கு நீதியும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத்தந்த வழக்கறிஞர் இரத்தினம் அவர்கள், கண்ணகி-முருகேசன் வழக்கிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அவருடைய தலையீடும் உதவியும்தான் இன்று முருகேசன் குடும்பத்தை உள்ளூர் சாதிவெறியர்கள், காவல்துறையினர், துரோகிகள் யாவரி டமுமிருந்தும் பாதுகாக்கிறது. இக்கொலைகளை வெளி யுலகுக்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட தலித்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக தொடக்கம் முதலே பணி யாற்றி வரும் மனிதஉரிமைப் போராளி புதுவை சுகுமாரன் இதுகுறித்த அனைத்துத் தகவல்களையும் திரட்டிவைத்துள்ளார். பாதிக்கப்பட்ட ஒரு தலித் குடும் பத்தை வஞ்சிப்பதற்கு துணைபோகிற வி.சியின் செயல் பாட்டை விமர்சிக்கிறவர்களை தலித் விரோதிகளென சித்தரிக்கும் போக்கு தலைதூக்கியுள்ளது. எனவே விசி அமைப்பினர் யாரையும் எங்கள் குழு சந்திக்கவில்லை. இருவரும் எரிக்கப்படுவதை காணச் சகியாமல் தொலை பேசி மூலம் போலிசுக்கு தெரிவித்த மனசாட்சியுள்ள யாரோ ஒரு படையாச்சி அங்கு மறைந்து வாழ்கிறார். யாரெனத் தெரிந்தால் கண்ணகிக்கு நேர்ந்த கதி அவருக்கும் நேரக்கூடும். எனவே அவரை தேடிப் பேச எங்கள் குழு முயற்சிக்கவில்லை. முருகேசன் குடும் பத்தார் மீது உள்ளுர் போலிசார் கொண்டிருக்கும் வன்மம் இன்னும் தணியவில்லை. இதுகுறித்து உண்மையறியும் குழு சார்பில் விருத்தாச்சலம் காவல் துணை கண்காணிப் பாளர் அலுவலகத்தில் புகார்கடிதம் தரப்பட்டுள்ளது.ஒருவர் திருமணம் செய்துகொள்வதற்கான எல்லையே சாதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆண்பெண் ரத்தக் கலப்பு ஒரு சாதிக்குள்ளேயே நிகழும்போது உருவாகும் சுத்தரத்தம் மறுபடியும் சாதியத்தையே தழைக்கச் செய்கிறது. எனவே வெறும் உணர்வாக மட்டுமேயல்லாது வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறியாகவும் ஒவ்வொரு தனிமனிதனின் மீதும் சாதி சுமத்தப்பட்டுள்ளது. இதை உயிரைக் கொடுத்தோ எடுத்தோ பாதுகாக்க வேண்டும் என்பதுதான் மானம் என்று போற்றப்படுகிறது. இதில் எவ்வித ஊசலாட்டத்திற்கும் ஒரு பெண் ஆளாகிவிடக்கூடாது என்பதானாலேயே கற்பு, புனிதம், பத்தினி, பால்யவிவாகம், உடன்கட்டை, கைம்மை ஆகியவற்றை அவளுக்கு ஒழுக்கங்களாக போதித்து வளர்க்கிறது சாதியச் சமூகம். பெண் இந்த ஒழுக்கங்களை வழுவாது பாதுகாக்கிறாளா என்பதை ஒற்றர்களைப் போல வேவுபார்ப்பதும், மீறும் பெண்களை ஒழுங்கு படுத்தி சுயசாதி ஆதிக்கத்திற்குள் பிணைத்துப் போடுவ தும்தான் நல்லதொரு குடும்பத்தின் இலக்கணமாக மாற்றப்பட்டுள்ளது.சாதிக் கொடுமைகள் நிகழும்போது களத்தில் தலையி டாமல், சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை என எல்லாவற்றுக்கும் காரணகாரியங்களோடு வியாக்கியானம் பேசி நிம்மதி கொள்கிறவர்களும், சாதி யம் நீடிப்பதற்கான அடிப்படைக் காரணங்களை கண்டு கொள்ளாமல் அவ்வப்போதான கொடுமைகளை மட் டுமே எதிர்க்கிற உணர்ச்சிப்பிழம்புகளும் சாதியம் நீடிக்கவே ஒத்துழைக்கின்றனர்.கலாச்சாரம் என்கிற சாதி அனாச்சாரங்களுக்கான தத்து வார்த்தத் தலைமையை பார்ப்பனர்களும் செயலாக்கப் பொறுப்பை இடைநிலைச் சாதியினரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவ்விரண்டு பிரிவுகளிலும் உள்ள சாதி மறுப்பாளர்கள் நீங்கலாக மற்றவர்களின் சாதியார்ந்த நடவடிக்கைகளை எதிர்த்த ஒருமுகப்பட்ட செயல்பாடுகளே இனியொரு கண்ணகியும் முருகேசனும் எரியுறா மல் காப்பாற்றும்.எந்த புரட்சிகர வசனங்களும் பேசாமல் இந்த நியதிகளையெல்லாம் மீறிவந்த கண்ணகி தன் குடும்பத்தாராலேயே எரிக்கப்பட்டுவிட்டாள். இது பற்றி யாதொரு பிரக்ஞையும் இல்லாமல் மதுரையை எரித்த கண்ணகி பற்றியே மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.சாதிகடந்த ரத்தக்கலப்பு நிகழாமல் சாதியம் ஒழியாது என்றனர் அம்பேத்கரும் பெரியாரும். தூய்மைவாதத்திற் குள் ஒளிந்து கொண்டிருக்கும் எந்தவொரு சாதியையும் தீட்டுப்படுத்துவது என்பதல்ல இதன் பொருள். மனிதன் என்ற பேரடையாளத்தை நோக்கி ஒவ்வொரு தனிமனித னும் நகர வேண்டிய பண்புரீதியான மாற்றத்தையே அவர்கள் முன்மொழிந்தனர். கண்ணகியும் முருகேசனும் தங்களது உயிரைக் கொடுத்து வழிமொழிந்துள்ளனர்.காவல்நிலையச் சாவுகள், காவல்நிலைய பாலியல் வன்முறைகள், மனிதவுரிமை மீறல்கள் போன்றவை நிகழும்போது தலையிடுகின்ற பல்வேறு மக்கள் இயக் கங்கள் இப்படுகொலை குறித்து கண்டும் காணாமல் இருப்பதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. பொத்தாம் பொதுவான பிரச்னைகளில் ஆட்சியாளர்களையோ அரசு நிர்வாகத்தையோ அமெரிக்காவையோ கண்டிப்பது எளிதானதே. ஆனால் இப்பகுதியில் செல்வாக்குள்ள படை யாச்சிகளின் சாதிவெறியைக் கண்டித்துவிட்டு அங்கே எவ்வாறு அரசியல் நடத்துவது என்கிற அச்சமும்கூட காரணமாயிருக்கலாம். ஆனால், தனித்துவிடப் பட்டுள்ள முருகேசனின் குடும்பம் இன்னும் தாங்கவேண்டிய துயரங்களுக்காக ஒரு போராளியைப் போல காத்துக்கொண்டிருக்கிறது.நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது மணிகண்டன் ( 14 ) என்ற சிறுவன் மிகுந்த கவனத்தோடு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் பேச்சு கொடுத்தோம். எங்க ஊரும் புதுக்கூரைப்பேட்டைதான். எங்கப்பா டி.அஞ்சாபுலி. அம்மா லட்சுமி. அம்மாவுக்கு இந்த குப்பநத்தம்தான் ஊர். பிரசரண்ட் மவன் மருதுபாண்டி எங்கம்மாவ வச்சிருக்கான். அவன் பொண்டாட்டி வெண்ணிலாவ தொரத்திட்டான். எப்பவும் எங்கூட்லியே இருப்பான். எங்கப்பாவால எதுத்து கேக்க முடியல. 2003 ல செத்துட்டார். நெஞ்சுவலின்னு சொன்னாங்க. (ஆனால் அடக்கத்தின் போது வெஷம் வச்சி கொன்னுட்டு நெஞ்சு வலின்னு நாடகமாடுறீங்களான்னு ஒருவர் சத்தம் போட்டிருக்கார். இரண்டுநாள் கழித்து அவரது வீடு எரிக்கப்பட்டது) அங்கிருந்தா எதாச்சும் பண்ணிடுவான்னு எங்க பாட்டி இங்க குப்பநத்தத்துக்கு என்னை கூட்டியாந்திருச்சு. இங்கிருந்துதான் ஸ்கூல் போறேன். 9வது படிக்கிறேன்.... என்றான். எஸ்.சி பையன்கிட்ட பழகினதுக்காக தங்கச்சிய கொன்னு எரிச்ச அந்த மருதுபாண்டி, எங்கம்மாகிட்ட வர்றானே அதுக்கு அவனை என்ன பண்றதுன்னு கேட்டான். அவன் முகத்தையே பார்க்க முடியவில்லை. அத்தனைக் கடுமை. யாரும் பதில் சொல்லவில்லை. பதில் தெரியவில்லை.பகத்http://www.blogger.com/profile/04440500903645450578noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8215438558782814699.post-68873683842297079442007-06-27T11:03:00.000-07:002007-06-27T11:13:17.338-07:00வெண்மனியே தேசமாய்...<span style="font-family:arial;">தொரட்டி<br />மூங்கில் கழி<br />உன் குறி நுழைத்து<br />என்ன தேடுகிறாய்<br />என் சகோதரியின் யோனிக்குள்<br />விதர்பாவில் தொலைத்த உன் வீரத்தையா?<br /><br />உன் விளைநிலத்தை<br />விதைகளை<br />தண்ணீரை<br />வன்புணர்ந்து திரியும்<br />மஹிகோ மான்சாண்டோக்கள்<br />உன் வீரத்தையும் வேட்டையாடுகிறார்கள்<br />விதர்பாவின் தெருக்களெங்கும்<br /><br />என்ன தேடுகிறாய்<br />என் சகோதரியின் யோனிக்குள்<br /><br />உன்<br />சாதிய தினவுக்கு தீனி போடும்<br />கேடுகெட்ட அரசாங்கமோ<br />சிறப்புப் பொருளாதார மண்டலமெனும்<br />சிறைக்குள்<br />உன்னை சுற்றி வளைத்துக்கொண்டிருக்கும்போது<br />நீ என்ன தேடுகிறாய்<br />என் சகோதரியின் யோனிக்குள்.<br /><br />விரைத்தகுறி வளைத்து<br />உன் மலப்புழைக்குள் செருகி<br />'ஜெய்ஹிந்த்' பாரத் மாதாகி ஜே- என<br />போலி தேசிய முழக்கமிடும் ஆண்மகனே<br />நண்பன் யார் பகைவன் யார் எனத் தெரியாமல்<br />இருட்டில் பாயும் குருட்டுப் பூனையே<br />உன் வீரம் வெளிப்படும் களம்<br />என் சகோதரியின் யோனியென்று<br />யாருனக்கு போதித்தது?<br /><br />'வெண்மணியே' தேசமாய்<br />விரிந்து நிற்கும் இப்பூமி<br />பற்றி எரிவதொன்றே தீர்வென்றால்<br />தீக்கங்குகள் பீறிட்டுக் கிளம்பும்<br />என் சகோதரியின் யோனிக்குள்ளிருந்து.<br /><br /><span style="font-size:85%;color:#990000;"><strong>-ஜொஷிவா தமிழி </strong></span><br /><span style="font-size:85%;color:#990000;"><strong>நெஞ்சை கனக்கச் செய்யும் கண்ணை சிவக்கச் செய்யும் கயர்லாஞ்சி படுகொலையை கண்டித்து எழுதப்பட்ட இந்த நெருப்புவரிகள் புது விசை எனும் பத்திரிக்கையில் தெறித்திருந்தவை..</strong></span></span>பகத்http://www.blogger.com/profile/04440500903645450578noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8215438558782814699.post-19384578167187873362007-06-27T10:56:00.000-07:002007-06-27T11:03:06.587-07:00நான் பிரகடனம் செய்கிறேன்எனது நாட்டில் ஒருசாண் நிலம்<br />எஞ்சி இருக்கும் வரை<br />என்னிடம் ஒரு ஒலிவ்மரம் எஞ்சி இருக்கும் வரை<br />ஒரு எலுமிச்சை மரம்<br />ஒரு கிணறு, ஒரு சப்பாத்திக் கள்ளி<br />எஞ்சி இருக்கும் வரை<br /><br />ஒரு சிறு நினைவு<br />ஒரு சிறு நூலகம்<br />ஒரு பாட்டனின் புகைப்படம், ஒரு சுவர்<br />எஞ்சி இருக்கும் வரை<br /><br />அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை<br />நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை<br />கவிஞர்கள்<br />அந்தர் அல்-அப்ஸ் கதைகள்<br />பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான<br />யுத்த காவியங்கள்<br />எனது நாட்டில் இருக்கும் வரை<br /><br />எனது கண்கள் இருக்கும் வரை<br />எனது உதடுகள் எனது கைகள்<br />எனது தண்ணுணர்வு இருக்கும் வரை<br />விடுதலைக்கான பயங்கரப் போரை<br />எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்.<br /><br /><span style="font-size:85%;color:#ff0000;"><strong>-மக்மூத் தார்வீஷ்</strong></span><br /><span style="font-size:85%;color:#ff0000;">பாலஸ்தீனக் கவிதை</span>பகத்http://www.blogger.com/profile/04440500903645450578noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8215438558782814699.post-71718259983626420522007-06-27T09:02:00.000-07:002007-06-27T09:16:41.955-07:00சாமி பெயருக்கு ஒரு அர்ச்சனைஎம்பெருமான் ஆலயத்தை<br />எழுத்துக் கூட்டிப் படித்து நுழையும் போதே<br />"தங்கள் பாத அணிகளை இங்கே விடவும்"<br />என்று படம் வரைந்து உவமையணியோடு<br />கால் வாங்குகிறது குத்தகைத் தமிழ்.<br /><br />உள்ளே அடியெடுக்க<br />உடனே தட்டுப்படும் உண்டியலோ<br />தனித்தமிழில்.<br /><br />இதோ "அர்ச்சனை சீட்டு வழங்குமிடம்"<br />நெம்பித்தள்ளூம் அம்புக்குறிக்குள்<br />நிர்வாகத்தமிழ்<br /><br />"சாமி பிரசாதம் கிடைக்குமிடம்"<br />மடப்பள்ளியும், விலைப்பட்டியலும்<br />மணக்கும் தமிழில்<br /><br />"அர்ச்சனை செய்து தங்களுக்கு<br />அஞ்சலிலேயே அனுப்பி வைக்கப்படும்<br />ஆகும் செலவு ஒரு நூறு"<br />சுண்டியிழுக்கும் விளம்பரமோ<br />சோடியம் தமிழில்.<br /><br />"கோயில் திருப்பணிக்கு<br />அம்பாளின் அருள்பெற<br />நன்கொடை தருபவர்கள்<br />தாராளமாய் தரவேண்டிய முகவரி"<br />அடிக்கோடிட்டு அன்னைத் தமிழில்.<br /><br />மெய்ப்பொருளை அடைய<br />மேலானது சமஸ்கிருதமென்றால்<br />எங்கள்<br />கைப்பொருளை பிடுங்க மட்டும்<br />கன்னித் தமிழைக் காட்டுவது<br />வெட்கமாயில்லையா<br />விளங்காத பரம்பொருளே!<br /><br /><br /><span style="font-size:85%;color:#ff0000;">தோழர் துரை. சண்முகம்</span><br /><span style="font-size:85%;color:#ff0000;"><strong>புதிய கலாச்சாரம்</strong></span>பகத்http://www.blogger.com/profile/04440500903645450578noreply@blogger.com4